அண்மைய செய்திகள்

recent
-

மீனவர்கள் இன்று முதல் விடுதலை: பேச்சுவார்த்தையின் பின் அறிவிப்பு

இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்கள் இன்று முதல் விடுவிக்கப்படுவார்கள் என அமைச்சர் ரஜித்த சேனாரத்ன தெரிவித்தார். 

தமிழக மீனவர்களின் பிரச்னை குறித்து, இலங்கை அமைச்சர் ரஜித்த சேனரத்னவுடன் மத்திய அமைச்சர் சரத்பவார் பேச்சுவார்த்தை நடத்தினார். 

தமிழக மீனவர்கள் பிரச்னை மற்றும் மன்னார் வளைகுடாவில் மீன் பிடிப்பதில் நிலவும் எல்லைப் பிரச்னை குறித்து இரு நாட்டு அமைச்சர்களும் பேச்சு வார்த்தை நடத்தினர். இந்த பேச்சு வார்த்தை சுமார் 1 மணி நேரம் நடந்தது. 

இந்த சந்திப்புக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ரஜித்த சேனாரத்ன, ´´இலங்கையின் சட்டமா அதிபருடன் பேசி மீனவர்கள் விடுதலைக்கு ஏற்பாடு செய்யப்படும். இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்கள் நாளை முதல் விடுவிக்கப்படுவார்கள். 

அவர்களின் படகுகளும் ஒப்படைக்கப்படும். மீனவர்கள் பிரச்சினை தொடர்பாக இருநாட்டு அதிகாரிகள் உள்ளடக்கிய 6 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. மீனவர்களுக்கிடையே ஏற்படும் ஒப்பந்தத்தை அங்கீகரிக்க தாராக இருக்கிறோம்´´ என்றார். 
மீனவர்கள் இன்று முதல் விடுதலை: பேச்சுவார்த்தையின் பின் அறிவிப்பு Reviewed by Author on January 16, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.