அண்மைய செய்திகள்

recent
-

மலையக மக்களுக்கான இந்திய அரசாங்கத்தின் 4000 வீடுகள் குறித்து கலந்துரையாடல்

இந்திய அரசாங்கத்தால் இலங்கை மலையக மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள 4000 வீடுகளை பகிர்ந்தளித்தல் தொடர்பான கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும், கால்நடை வள மற்றும் கிராமிய சமூக அபிவிருத்தி அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் தலைமையில் இந்திய அரசாங்கத்தால் மலையக மக்களுக்கு 4000 வீடுகள் அன்பளிப்பாக வழங்கப்படவுள்ளது. 

எவ்வாறு இவ்வீடுகள் பகிர்ந்தளிப்பது தொடர்பான கலந்துரையாடல் கால்நடை வள அமைச்சின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. 

இக்கலந்துரையாடலில் இ.தொ.காவின் தலைவரும், பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சருமான முத்துசிவலிங்கம், ஊவா மாகாண அமைச்சர் செந்தில் தொண்டமான், மத்திய மாகாண விவசாய அமைச்சர் முத்தையா இராமசாமி, மத்திய மாகாண சபை உறுப்பினர்கள், பெருந்தோட்ட மனித வள அபிவிருத்தி நிதியத்தின் பணிப்பாளர் நாயகம், இவ்வமைப்பின் பிராந்திய பணிப்பாளர்கள், உயர் அதிகாரிகள், இ.தொ.காவின் காரியதரசி, மற்றும் இ.தொ.காவின் முக்கிய அதிகாரிகள், அமைச்சின் உயர் அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர். 
மலையக மக்களுக்கான இந்திய அரசாங்கத்தின் 4000 வீடுகள் குறித்து கலந்துரையாடல் Reviewed by Author on January 30, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.