அண்மைய செய்திகள்

recent
-

தமிழக மீனவர்கள் மீண்டும் தாக்கப்பட்டதாக குற்றச்சாட்டு

இலங்கை மீனவர்களிடையேயான பேச்சுவார்த்தை இன்று நடைபெற உள்ள நிலையில், இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களை விரட்டியடித்துள்ள சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. 

மண்டபம் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் 500 விசைப் படகுகளில் மீன் பிடிக்கச் சென்றனர். 

கச்சத்தீவு பகுதியில் அவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது, அங்கு வந்த இலங்கை கடற்படையினர் மீனவர்களின் வலையை அறுத்ததுடன், மீன்களையும் அள்ளிச் சென்றனர். 

மேலும் படகுகளை சேதப்படுத்திய அவர்கள், மீனவர்களை அப்பகுதியில் இ-ருந்து விரட்டியடித்தனர். இதனால் பெரும் நஷ்டத்திற்கு ஆளாகியுள்ளதாக பாதிக்கப்பட்ட மீனவர்கள் தெரிவித்துள்ளனர். 

இந்திய - இலங்கை மீனவர்களிடையேயான பேச்சுவார்த்தை இன்று நடைபெற உள்ள நிலையில் இலங்கை கடற்படையினரின் இந்த அத்துமீறல் மீனவர்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. 

இன்று நடைபெற உள்ள பேச்சுவார்த்தையில் சுமூக தீர்வு காணப்பட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர். 
தமிழக மீனவர்கள் மீண்டும் தாக்கப்பட்டதாக குற்றச்சாட்டு Reviewed by Author on January 27, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.