வட மாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவர் கந்தசாமி கமலேந்திரன் கட்சியிலிருந்து நீக்கம்
வட மாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவர் கந்தசாமி கமலேந்திரன் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் அங்கத்துவ உறுப்புரிமையிலிருந்து நிரந்தரமாக நீக்கப்பட்டுள்ளதாக அக்கட்சி உத்தியோகபூர்வாக அறிவித்துள்ளது.
கடந்த 16 ஆம் திகதி கட்சியின் மத்திய குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவிற்கு அமைவாக அவர் கட்சியில் இருந்து உடன் அமுலிற்கு வரும் வகையில் நீக்கப்பட்டுள்ளதாக கட்சியின் நிர்வாகச் செயலாளரினால் யாழ். சிறைச்சாலை அத்தியட்சகர் ஊடாக சிறையிலுள்ள கமலேந்திரனுக்கு கடிதம் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினரும், முன்னாள் நெடுந்தீவுப் பிரதேச சபையின் தலைவருமான டானியல் ரெக்ஷியன் என்பவரை கொலை செய்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டு பொலிஸாரால் கைது செய்யப்பட்டு ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்ற உத்தரவின் பேரில் கமலேந்திரன் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
கமலேந்திரன் மீது சுமத்தப்பட்டுள்ள கொலைக் குற்றச்சாட்டினால் ஈழ மக்கள் ஜனநாயக் கட்சிக்கு ஏற்பட்டுள்ள அசௌகரியங்களையும் அவமானங்களையும் களையக்கூடிய வகையில் அவரைக் கட்சியில் இருந்து நிரந்தரமாக நீக்கியுள்ளதாக அக்கட்சி மேலும் தெரிவித்துள்ளது.
வட மாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவர் கந்தசாமி கமலேந்திரன் கட்சியிலிருந்து நீக்கம்
Reviewed by NEWMANNAR
on
February 03, 2014
Rating:

No comments:
Post a Comment