அபிவிருத்தி மக்களின் பிரச்சனைக்கு தீர்வாக அமையாது; ஐங்கரநேசன் தெரிவிப்பு
அரசாங்கம் போரினால் ஏற்படுத்தப்பட காயங்களை மறைப்பதற்கான ஒரு கருவியாகத்தான் தமிழர் பிரதேசங்களில் அபிவிருத்தி திட்டங்களை மேற்கொண்டு வருகின்றது என வடமாகாண விவசாய அமைச்சர் பொன்னுத்துரை ஐங்கரநேசன் தெரிவித்தார். உண்மையில் அபிவிருத்தி என்பது சமாதானத்திற்கான தீர்வாகவே அல்லது மக்களின் பிரச்சனைக்கு தீர்வாக அமையாது. தமிழர் பிரதேசங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் அபிவிருத்தியின் பின்னால் எங்களுடைய வளங்களையும், மக்களுடைய உழைப்பையும் சுறண்டுகின்ற நடவடிக்கையே என அவர் தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்ற கவனயீர்ப்பு போராட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
அபிவிருத்தி மக்களின் பிரச்சனைக்கு தீர்வாக அமையாது; ஐங்கரநேசன் தெரிவிப்பு
Reviewed by Author
on
February 17, 2014
Rating:
Reviewed by Author
on
February 17, 2014
Rating:

No comments:
Post a Comment