அண்மைய செய்திகள்

recent
-

இஸ்ரேலில் தாக்குதல் தொடர்கிறது; உயிரிழப்பு 572 ஆக அதிகரிப்பு

இஸ்ரேலின் தொடர் தாக்குதலில் காஸாவில் பலியானோர் எண்ணிக்கை 572 ஆக அதிகரித்துள்ளது. இந்நிலையில் அங்கு உடனடியாக போர் நிறுத்தத்தை அமுலுக்கு கொண்டுவருமாறு ஐ.நா. பாதுகாப்பு பேரவை வலியுறுத்தியுள்ளது. ஹமாஸ் கிளர்ச்சியாளர்கள் வசமுள்ள பலஸ்தீனத்தின் காஸா பகுதியில் அடிக்கடி மோதலும், எதிர்த் தாக்குதலும் தொடர்ந்த வண்ணமுள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன. 

 எகிப்தின் போர் நிறுத்தத் திட்ட முயற்சியை இஸ்ரேல் ஏற்றுக்கொண்டு, கடந்த 15 ஆம் திகதி காலை சில மணி நேரம் போர் நிறுத்தம் செய்தது. எனினும், ஹமாஸ் அதனை ஏற்க மறுத்ததால், இஸ்ரேல் மீண்டும் தாக்குதலைத் தொடர்ந்தது. பதற்றம் நீடித்துக் கொண்டிருக்கும் நிலையில், ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு பேரவையின், இடம்பெற்றுள்ள 15 நாடுகளின் உறுப்பினர்கள் நேற்றிரவு கட்டாரில் கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளனர்.

 இதன்போது, கடந்த 2012 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் உடனான ஒப்பந்தத்தின் அடிப்படையில், போர் நிறுத்தம் உடனடியாக அமுல்படுத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. காஸாவில் கடந்த இரு வாரங்களில், 18 இஸ்ரேல் இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதாகவும், அதனால் தாக்குதல் நீடிக்கும் என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெடன்யாஹு தெரிவித்துள்ளார். இதனிடையே, அமெரிக்க ஜனாதிபதியின் அறிவுறுத்தலின் பேரில் அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஜோன் கெரி இந்த விடயம் தொடர்பில் கலந்துரையாடல்களை மேற்கொள்ள எகிப்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.
இஸ்ரேலில் தாக்குதல் தொடர்கிறது; உயிரிழப்பு 572 ஆக அதிகரிப்பு Reviewed by NEWMANNAR on July 22, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.