அண்மைய செய்திகள்

recent
-

தலைமன்னார் கடற்பரப்பில் வைத்து 20 இந்திய மீனவர்கள் கைது

இலங்கைக் கடற்பரப்பினுள் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் 20 பேர் தலைமன்னார் கடற்பரப்பில் வைத்து இன்று செவ்வாய்க்கிழமை(22) அதிகாலை கடற்படையினர் கைது செய்துள்ளதாக மன்னார் மாவட்ட கடற்தொழில் உதவிப்பணிப்பாளர் வி.எஸ்.மெராண்டா தெரிவித்தார். 

தலை மன்னார் கடற்பரப்பினுள் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்டிருந்த 5 படகுகளைச் சேர்ந்த இந்திய மீனவர்கள் 20 பேரை கடற்படையினர் இவ்வாறு கைது செய்துள்ளனர். கைது செய்த கடற்படையினர் அவர்களை தலைமன்னார் கடற்படை முகாமிற்கு அழைத்துச் சென்றுள்ள நிலையில் விசாரனைகளின் பின் தம்மிடம் அவர்கள் ஒப்படைக்கப்படுவார்கள் என மன்னார் மாவட்ட கடற்றொழில் திணைகக்களத்தின் மாவட்ட உதவிப்பணிப்பாளர் வி.எஸ்.மெராண்டா தெரிவித்தார். 

தம்மிடம் ஒப்படைக்கப்படும் குறித்த 20 இந்தி மீனவர்களும் உரிய விசாரனைகளின் பின் மன்னார் நீதிமன்றத்தில் நாளை ஆஜர் படுத்தப்படுவார்கள் என அவர் மேலும் தெரிவித்தார்.
தலைமன்னார் கடற்பரப்பில் வைத்து 20 இந்திய மீனவர்கள் கைது Reviewed by NEWMANNAR on July 22, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.