அண்மைய செய்திகள்

recent
-

காசல்ரீ நீர்த்தேக்கத்தில் ஒரு இலட்சம் மீன் குஞ்சுகள் விடுவிப்பு

மலையகத்தின் நன்னீர் மீன் வளர்ப்பை ஊக்குவிக்கும் முகமாக மத்திய மாகாண நீரியல்வள திணைக்களத்தினால் முன்னெடுக்கப்பட்டு வரும் மீன் குஞ்சுகளை நீர் தேக்கங்களில் விடும் நடவடிக்கையின் ஓர் அங்கமாக அட்டன் காசல்ரீ நீர்த்தேக்கத்தில் மீன் குஞ்சுகள் விடப்பட்டன. 

 சுமார் ஒரு இலட்சம் மீன் குஞ்சுகள் இதன் போது காசல்ரீ நீர்த்தேக்கத்தில் விடப்பட்டதுடன் இதில் இரண்டு வகையான மீன் இனங்கள் காணப்பட்டன. தற்போது விரல் அளவில் காணப்படும் இந்த மீன் குஞ்சுகள் ஒரு மாதத்தில் சுமார் ஒரு கிலோ வரை வளர்ச்சியடையக் கூடியது என தெரிவிக்கப்பட்டது.


 இந்த திட்டத்தினால் இந்த நீர் தேக்கத்தில் மீன் பிடியில் ஈடுப்படுபவர்கள் சிறந்த வருமானத்தை பெற்றுக் கொள்வதற்கான வாய்ப்புகள் கிடைப்பதுடன் இந்த நீர்த்தேக்கத்தை சுற்றி அமைந்துள்ள பெருந்தோட்டத்தில் வாழுபவர்களுக்கு குறைந்த விலையில் மீன்களை பெற்றுக் கொள்வதற்கான வாய்ப்பும் உள்ளதாக இந்த நிகழ்வுக்கு சமூகம் தந்திருந்த மத்திய மாகாண நீரியல்வள திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர்.

 இது இப்பகுதி பெருந்தோட்ட சிறுவர்களின் புரத உணவிற்கு வழி செய்து கொடுப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
காசல்ரீ நீர்த்தேக்கத்தில் ஒரு இலட்சம் மீன் குஞ்சுகள் விடுவிப்பு Reviewed by NEWMANNAR on August 14, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.