மன்னாரில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களை வடமாகாண அமைச்சர்,வடமாகாண சபை உறுப்பினர்நேரில் சென்று பார்வை-Photos
அசாதாரண கால நிலை காரணமாக பெய்து வரும் கடும் மழையின் காரணமாக மன்னார் மாவட்டத்தின் பல பகுதிகளில் ஏற்பட்டுள்ள வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களை வடமாகாண அமைச்சர் பா.டெனிஸ்வரன்,வடமாகாண சபை உறுப்பினர் பிரிமூஸ் சிறாய்வா ஆகியோர் நேற்று செவ்வாய்க்கிழமை நேரில் சென்று பார்வையிட்டுள்ளனர்.
மன்னார் நகர சபை பிரிவுக்குற்பட்ட பகுதிகளில் தேங்கியுள்ள வெள்ள நீரை கடலுக்கு கொண்டு செல்லும் உடனடி வேலைத்திட்டத்தினை மன்னார் நகர சபையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
இவ்வேலைத் திட்டங்களை வடக்கு மாகாண அமைச்சர் பா.டெனிஸ்வரன் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டதுடன் பாதிக்கப்பட்டு பொது இடங்களில் தங்கியுள்ள அனைத்து மக்களையும் சந்தித்து அவர்களுக்கு உடனடியாக சமைத்த உணவு வழங்குமாறு சம்மந்தப்பட்ட பிரதேச செயலாளர்களுக்கூடாக அனர்த்த முகாமைத்துவ மையத்துக்கு அறிவுறுத்தல் வழங்கினார்.
இதே வேளை மன்னார் பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட ஜிம்ரோன் நகர் கிராம மக்கள் இடம் பெயர்ந்து அடிப்படை வசதிகள் எவையும் அற்ற பாலர் பாடசாலையில் தங்கியுள்ளனர்.
சுமார் 17 குடும்பங்களைச் சேர்ந்த 70 பேர் வரை அங்கு தங்கியுள்ளனர்.இந்த மக்களுக்கு மலசல கூட வசதிகள் எவையும் இல்லாமையினால் தாம் பல்வேறு சுகாதார பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வருவதாக அந்த மக்கள் மாகாண சபை உறுப்பினர் பிரிமூஸ் சிறாய்வா அவர்களிடம் முறையிட்டுள்ளனர்.
இதே வேளை மன்னார் பிரதேச செயலகத்தினால் தமக்கு வழங்கப்பட்டு வரும் உலர் உணவுப்பொருட்கள் தாமதித்த நேரத்திற்கே வழங்கப்படுவதாகவும் இதனால் குழந்தைகள் முதல் அனைவரும் மாலை 3 மணிக்கு பின்பே மதிய உணவு உண்ண வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக அந்த மக்கள் மாகாண சபை உறுப்பினரிடம் மேலும் தெரிவித்துள்ளனர்.
மன்னாரில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களை வடமாகாண அமைச்சர்,வடமாகாண சபை உறுப்பினர்நேரில் சென்று பார்வை-Photos
Reviewed by Admin
on
December 24, 2014
Rating:

No comments:
Post a Comment