அண்மைய செய்திகள்

recent
-

குஞ்சுக்குளம் கிராம மக்களுக்கு வானூர்தி மூலம் உணவுப்பொருட்கள்,மருந்து வகைகள் அனுப்பி வைப்பு.(Photos)

தரை வழிப்பாதை துண்டிக்கப்பட்ட மன்னார் மாவட்டம் மடு உதவி அரசாங்க அதிபர் பிரிவுக்குற்பட்ட குஞ்சுக்குளம்,மாதா கிராமம் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த மக்களுக்கு தேவையான மருத்துவப்பொருட்கள்,அத்தியாவசிய உணவுப்பொருட்கள் ஆகியவை இன்று(24) புதன் கிழமை காலை விமானப்படைக்குச் சொந்தமான  விசேட வானூர்தி(டெலிகெப்டர்) மூலம் குஞ்சுக்குளம் கிராமத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

மாவட்ட அனார்த்த முகாமைத்துவ பிரிவின் ஏற்பாட்டில் குறித்த பொருட்கள் அக்கிராம மக்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.குறித்த வானூர்தியில் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் எம்.வை.எஸ்.தேசப்பிரிய,வடமாகாண அமைச்சர் பா.டெனிஸ்வரன்,மடு பிரதேசச் செயலாளர் சத்திய சோதி, மன்னார் மாவட்ட அனார்த்த முகாமைத்துவ பிரிவின் மாவட்ட உதவிப்பணிப்பாளர் எம்.ஏ.சி.முஹமட் றியாஸ் மற்றும் வைத்தியர்கள் ஆகியோர் குஞ்சுக்குளம் கிராமத்திற்குச் சென்றுள்ளனர்.

குறித்த கிராமங்களைச் சேர்ந்த சுமார் 300 குடும்ங்கள் எவ்வித அடிப்படை வசதிகளுமற்ற நிலையில் வாழ்ந்து வருகின்றனர்.கடந்த ஒரு வார காலமாக குஞ்சுக்குளம் கிராமத்திற்கான தரைவழிப்பாதை வெள்ள நீரினால் மூழ்கியுள்ளது.இதனால் போக்கு வரத்து தொடர்புகள் துண்டிக்கப்பட்டுள்ளது.

மல்வத்து ஓயா பெறுக்கெடுத்து அனைக்கட்டுகள் உடைந்த நிலையில் குறித்த பாதைகள்,அப்பகுதியில் உள்ள கிராமங்கள் வெள்ள நீரில் மூழ்கியுள்ளது.

-இந்த நிலையில் குஞ்சுக்குளம் கிராமத்திற்கான தரை வழிப்பாதைகள் அனைத்தும் வெள்ள நீரில் மூழ்கியுள்ளமையினால் அந்த மக்களுக்கு தேவையான பொருட்களை எடுத்துச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டிருந்தது.
இந்த நிலையில் விமானப்படையின் உதவியுடன் குறித்த பொருட்கள் குஞ்சுக்குளம் கிராமத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக வடமாகாண அமைச்சர் பா.டெனிஸ்வரன் தெரிவித்தார்.

-மேலும் அங்குள்ள பாலூட்டும் தாய்மார்கள்,சிறுவர்கள்,கர்ப்பினித் தாய்மார்கள்,முதியவர்கள் என அனைவரும் பாதீப்படைந்துள்ளனர்.

சமைத்த உணவு வழங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட போதும் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.இந்த நிலையிலே அத்தியாவசிய உணவுப்பொருட்கள் மற்றும் மருத்துவப்பொருட்கள் ஆகியவை எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.என வடமாகாண அமைச்சர் பா.டெனிஸ்வரன் மேலும் தெரிவித்தார்.












மன்னார் நிருபர்
(24-12-2014)

-
குஞ்சுக்குளம் கிராம மக்களுக்கு வானூர்தி மூலம் உணவுப்பொருட்கள்,மருந்து வகைகள் அனுப்பி வைப்பு.(Photos) Reviewed by NEWMANNAR on December 24, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.