அண்மைய செய்திகள்

recent
-

தைப் பொங்கல் திருநாளை முன்னிட்டு வல்வெட்டித்துறையில் பட்டம் விடும் போட்டி [படங்கள் இணைப்பு]

தைப் பொங்கல் திருநாளை முன்னிட்டு வல்வெட்டித்துறையில் பட்டம் விடும் போட்டி [படங்கள் இணைப்பு]
வல்வெட்டித்துறை விக்னேஸ்வரா சன சமூக சேவா நிலையத்தால் பொங்கல் திருநாளை முன்னிட்டு நடாத்தப்பட்ட 2015ம் ஆண்டுக்கான வினோத சித்திர பட்டப் போட்டியும் இணைய நுாலக வசதியை ஆரம்பித்தலும். வல்வெட்டித்தறை கல்வி சாதனையாளர்களை கௌரவிப்பு நிகழ்வு வியாழக்கிழமை (15) 2.30 மணிக்கு உதயசூரியன் உல்லாசக் கடற்கரையில் சி.தவராசா தலைமையில் இடம்பெற்றது.
இப் பட்ட போட்டியையும் இணைய நுாலக வசதியையும் பிரதம விருந்தினரான வடமாகாண கல்வி அமைச்சர் தம்பிராசா குருகுலராசா ஆரம்பித்து வைத்தார். அதனைத் தொடர்ந்து 53 பட்டப் போட்டியாளர்கள் கலந்துகொண்டு தங்களுடைய வினோதமான பட்டங்களை பறக்கவிட்டனர்.
இதில் 1ம் இடத்தை தாஜ்மாகல் பட்டத்தை பறக்கவிட்ட சிவநாதன் நிமலன் 2ம் இடத்தை லாண்ட் மாஸ்ரா் பட்டத்தை பறக்கவிட்ட மகேந்திரன் காசன் 3ம் இடத்தை சைநிஸ் றாகன் பட்டத்தை பறக்கவிட்ட நாகலிங்கம் அகர் ஆகிய போட்டியாளர்கள் தட்டிச் சென்றனர். மற்றய ஏணைய 16 போட்டியாளருக்கும் ஆறுதல் பரிசில்கள் வழங்கிவைக்கப்பட்டதுடன் கல்வி சாதனையாளருக்கான கௌரவிப்பும் இடம்பெற்றது.
இன் நிகழ்வில் வடமாகாண கல்வி அமைச்சர் தம்பிராசா குருகுலராசா. வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம்.வல்வெட்டித்துறை பொலிஸ் பொருப்பதிகாரி ரி.எஸ்.மீடின். வல்வெட்டித்துறை கிராம உத்தியோகத்தர் சி.தவனேஸ்வரன். மற்றும் மாணவர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

 படங்களை பார்க்க 
http://photos.newmannar.com/

http://photos.newmannar.com/2015/01/kite-competition-in-jaffna.html

தைப் பொங்கல் திருநாளை முன்னிட்டு வல்வெட்டித்துறையில் பட்டம் விடும் போட்டி [படங்கள் இணைப்பு] Reviewed by NEWMANNAR on January 17, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.