மன்னார் மாவட்டத்தில் பனை சார் உற்பத்தியை ஊக்குவிக்க உபகரணங்கள் வழங்கி வைப்பு.-Photos
மன்னார் மாவட்டத்தில் பனை சார் உற்பத்தி திறனை ஊக்குவிக்கும் வகையில் பனை சார் உற்பத்தி நடவடிக்கையில் ஈடுபடும் உற்பத்தியாள்களுக்கு மன்னார் மாவட்ட பனை அபிவிருத்தி சபையினால் தொழில் சார் உபகரணங்கள் இன்று(10) செவ்வாய்க்கிழமை வழங்கி வைக்கப்பட்டது.
-கைத்தொழில் வர்த்தக அமைச்சர் றிஸாட் பதியுதீனின் பணிப்புரைக்கு அமைவாக குறித்த தொழில் சார் உபகரணங்கள் சுமார் 100 பயணாளிகளுக்கு வழங்கப்பட்டது.
-பதநீர் உற்பத்தி,ஒடியல் தயாரித்தல்,பனம் கழி தயாரித்தல் போன்றவற்றிற்கான உபகரணங்கலே இவ்வாறு வழங்கப்பட்டது.
மன்னார் மாவட்ட பனை அபிவிருத்தி சபையினால் மாவட்ட இணைப்பாளர் பெனில்டெஸ் தலைமையில் இடம் பெற்ற குறித்த நிகழ்வில்பனை அபிவிருத்தி சபையின் தலைவர் கமல்நாதன் விஜிதன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டு தொழில் சார் உபகரணங்களை வழங்கி வைத்தமை குறிப்பிடத்தக்கது.
மன்னார் மாவட்டத்தில் பனை சார் உற்பத்தியை ஊக்குவிக்க உபகரணங்கள் வழங்கி வைப்பு.-Photos
Reviewed by NEWMANNAR
on
March 10, 2015
Rating:
No comments:
Post a Comment