அண்மைய செய்திகள்

recent
-

நூறு நாள் வேலைத்திட்டத்தின் கீழ் மன்னார் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய அபிவிருத்தி திட்டங்கள் குறித்து ஆராய்வு - Photos

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வின் ''100 நாள்'' வேலைத்திட்டத்தின் கீழ் மன்னார் மாவட்டத்தில் உள்ள கிராம சேவையாளர் பிரிவுகளில் முன்னெடுக்கப்பட வேண்டிய அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் தொடர்பாக ஆராயும் அவசர கலந்துரையாடல் இன்று(6) திங்கட்கிழமை காலை மன்னார் மாவட்டச் செயலகத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் எம்.வை.எஸ்.தேசப்பிரிய தலைமையில் இடம் பெற்றது.

வீட்டிற்கு வீடு- கிராமத்திற்கு கிராமம் 15 ஆயிரம் கிராமங்களை அபிவிருத்தி செய்யும் வேலைத்திட்டத்தின் கீழ் மன்னார் மாவட்டத்தில் மன்னார்,நானாட்டான்,முசலி,மாந்தை மேற்கு,மடு ஆகிய ஐந்து பிரதேசச் செயலாளர் பிரிவுகளிலும் உள்ள ஒவ்வொரு  கிராம சேவையாளர் பிரிவுகளிலும் கிராம அபிவிருத்தித்திட்டத்திற்காக 10 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில் குறித்த கிராமங்களில் மேற்கொள்ளப்படவுள்ள வேலைத்திட்டங்கள் தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டது.

குறித்த கலந்துரையாடலில் மேலதிக அரசாங்க அதிபர் திருமதி நந்தினி ஸ்ரான்லி டி மேல்,வீடமைப்பு மற்றும் சமூர்த்தி அமைச்சின் பணிப்பாளர் முஹமட் வஹாப்தீன்,வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான சிவசக்தி ஆனந்தன்,செல்வம் அடைக்கலநாதன்,முத்தலிப் பாபா பாரூக் வடமாகாண சபை உறுப்பினர்களான பிரிமூஸ் சிறாய்வா,என்.குணசீலன்,அயூப் அஸ்மி பிரதேச செயலாளர்கள்,உள்ளுராட்சி மன்றங்களின் தலைவர்கள்,உப தலைவர்கள்,உறுப்பினர்கள்,திணைக்கள தலைவர்கள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.

இதன் போது ஒவ்வொரு  கிராம சேவையாளர் பிரிவுகளிலும் ஒதுக்கப்பட்டுள்ள 10 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் மேற்கொள்ளப்பட வேண்டிய முக்கிய அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் குறித்து விரிவாக ஆரயப்பட்டமை குறிப்பிடத்தக்கது.








நூறு நாள் வேலைத்திட்டத்தின் கீழ் மன்னார் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய அபிவிருத்தி திட்டங்கள் குறித்து ஆராய்வு - Photos Reviewed by NEWMANNAR on April 06, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.