கற்பிட்டி மீனவர் சிலாபத்துறையில் சடலமாக மீட்பு.
மன்னார் மாவட்டம் முசலி பிரதேச செயலாளர் பிரிவுக்குற்பட்ட சிலாபத்துறை கடற்கரையில் கரை ஒதுங்கிய நிலையில் இளைஞர் ஒருவருடைய சடலத்தை பொலிஸார் மீட்டு நேற்று(17-04-2015)வெள்ளிக்கிழமை இரவு மன்னார் பொது வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளனர்.
சடலமாக மீட்கப்பட்டவர் கற்பிட்டியச் சேர்ந்த சஞ்சீவ குமார பெர்ணாண்டோ (வயது-21) என அடையாளம் காணப்பட்டுள்ளதாக மன்னார் வைத்தியசாலை தரப்பினர் தெரிவித்துள்ளனர்.
கற்பிட்டியைச் சேர்ந்த 4 மீனவர்கள் முசலி பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட சிலாபத்துறை கடற்கரை பகுதியில் வாடி அமைத்து தங்கி இருந்து மீன்பிடியில் ஈடுபட்டு வந்துள்ளனர்.
குறித்த 4 மீனவர்களும் வாடியில் இருந்த போது உயிரிழந்த குறித்த சஞ்சீவ குமார பெர்ணாண்டோ(வயது-21) என்ற மீனவர் நேற்று வெள்ளிக்கிழமை(17-04-2015)காலை 5 மணியளவில் வாடியில் இருந்து காலைக்கடன் கழிப்பதற்காக வெளியில் சென்றுள்ளார்.
எனினும் நீண்ட நேரமாகியும் அவர் திரும்பி வராத நிலையில் ஏனை மீனவர்கள் அவரை தேடியுள்ளனர்.
இந்த நிலையில் காணாமல் போன மீனவர் நேற்று வெள்ளிக்கிழமை மாலை 7 மணியளவில் சிலாபத்துறை கடற்கரையில் சடலமாக கரை ஒதுங்கியுள்ளார்.என தெரிய வந்துள்ளது.
\
இந்த நிலையில் சிலாபத்துறை பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்ட நிலையில்; சிலாபத்துறை பொலிஸார் சம்பவ இடத்திற்கு வந்து சடலத்தை மீட்டு மன்னார் பொது வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளனர்.
சடலத்தில் காயங்கள் காணப்படுகின்ற நிலையில் பொலிஸார் விசரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
தற்போது சடலம் மன்னார் பொது வைத்தியசாலையின் பிரேத அரையில் வைக்கப்பட்டுள்ளது.
கற்பிட்டி மீனவர் சிலாபத்துறையில் சடலமாக மீட்பு.
Reviewed by NEWMANNAR
on
April 18, 2015
Rating:

No comments:
Post a Comment