மன்னார் எருக்கலம்பிட்டியில் 50 வீடுகள் அமைப்பதற்கு அடிக்கல் நாட்டி வைப்பு.-Photos
மன்னார் எருக்கலம் பிட்டி கிராமத்தில் 50 வீடுகள் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு நேற்று(3) சனிக்கிழமை காலை எருக்கலம்பிட்டி மக்கள் மேம்பாட்டு அமைப்பின் ஏற்பாட்டில் இடம் பெற்றது.
இதன் போது குறித்த நிகழ்விற்கு பிரதம அதிதியாக கலந்து கொண்ட அமைச்சர் றிஸாட் பதியுதீன் கிராமத்தின் முதற்கட்ட பணியாக 50 வீடுகளுக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வினை ஆரம்பித்து வைத்தார்.
அதனைத் தொடர்ந்து எருக்கலம் பிட்டி ம.வி பாடசாலையில் இடம் பெற்ற நிகழ்வில் கலந்து கொண்ட அமைச்சர் மீனவர்களுக்கான மீன்பிடி உபகரணங்கள் வழங்கல், திவிநெகும வாழ்வாதார உதவிகள், மாதர் சங்க சுயதொழில் வாய்ப்பு, நெசவுத்தொழிலுக்கான உதவி,பாடசாலை மாணவர்களுக்கான புத்தகப்பை ஆகியவற்றையும் வழங்கி வைத்தார்.
குறித்த நிகழ்வில் வடமாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன்,முசலி பிரதேச சபையின் தலைவர் எம்.எகியான் மன்னார் வலயக்கல்விப்பணிப்பாளர் எம்.எம்.சியான் ஆகியோர் கலந்து கொண்டிருந்து கொண்டிருந்தனர்.
மன்னார் எருக்கலம்பிட்டியில் 50 வீடுகள் அமைப்பதற்கு அடிக்கல் நாட்டி வைப்பு.-Photos
Reviewed by NEWMANNAR
on
May 03, 2015
Rating:
No comments:
Post a Comment