மன்னார் இணையத்தில் (Newmannar.com)பிரசுரிக்கப்பட "ஊடக வியலாளரை தலைமன்னாரில் வைத்து தாக்குவதற்கான முயற்சி" என்ற செய்திக்கு மறுப்பு தெரிவிக்கும் கிராமமக்கள் -photos
கடந்த 29.06.2015 அன்று சிரேஸ்ர ஊடக வியலாளரை தலைமன்னாரில் வைத்து தாக்குவதற்கான முயற்சி மேற்கொள்ளப்பட்டது எனும் செய்தி மன்னார் இணையத்தில் வெளியிடப்பட்டதையிட்டு தலைமன்னாரின் மக்கள் என்ற வகையில் மிக்க மன வேதனை அடைகின்றோம்.
சம்பவம் தொடர்பான சில தெளிவாக்கங்களை உங்களுடன் செய்து கொள்ள விரும்புகின்றோம். இப் பிரச்சனை 28.06.2015 அன்று ஏற்பட்ட பிரச்சனை அல்ல என்பதை மக்கள் மிகவும் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும். இது ஒரு நிலம் சார்ந்த பிரச்சனை. ஒரு குடும்பத்திற்கும் ஒரு கிராமத்திற்கும் இடையிலான பிரச்சனை.
1992 ம் ஆண்டு காலப்பகுதியில் எமது மண்ணின் பங்குத் தந்தையாக அருட்.தந்தை லடிஸ் லாஸ் அவர்கள் பங்கினுடைய பங்குத் தந்தையாக விளங்கினார் அப்போது இளைஞர்களின் செயற்பாடு மிகவும் சிறப்பான முறையில் காணப்பட்டது. இவ் இளைஞர்கள் தமது கரப்பந்தாட்ப் பயிற்சியினை எமது பிரதான கடைத் தெருவுக்கு அருகாமையில் உள்ள புனித லோறன்சியார் ஆலயத்துக்குச் சொந்தமான கரப்பந்தாட்ட மைதானத்தில் தமது பயிற்சியினை மேற்கொண்டு வந்தனர். இச் சந்தர்ப்பத்தில் இங்கு ஊடகவியளாளர் எனக் குறிப்பிடப்படுபவரின் குடும்பத்தாருக்கும் பங்கு மக்களுக்கும் இடையில் விளையாடும் விளையாட்டு மைதானம் யாருடையது என பிரச்சனையின் முதற்கட்டம் ஆரம்பமானது. இப் பிரச்சனையின் பொழுது ஊடகவியளாலரின் குடும்பத்தினர் இவ் மைதானம் தமது காணி எனக் கூறி சுற்றுவேலி அமைக்கத் தொடங்கினர். இதனால் ஆத்திரமுற்ற இளைஞர்கள் பங்குத்தந்தை தலைமையில் இப் பிரச்சனைக்கு நியாயம் கேட்டும் நியாயம் கிடைக்காமையினால் மைதானத்தை முற்றுகையிட்டு அங்கு அடைக்கப்பட்டிருந்த வேலிகளைப் பிரித்தனர்.
இப் பிரச்சனை காவல் துறை வரை சென்றதினால் எமது இளைஞர்கள் 10க்கு மேற்பட்டவர்கள் சிறைச்சாலையில் பல நாட்களாக அடைக்கப்பட்டனர்.
எமது இளைஞர்கள் தொடர்ந்து தமது பொதுத் தேவை மற்றும் விளையாட்டுகளுக்காக இவ் மைதானத்தை பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில் எமது மண்ணில் அடுத்த தலைமுறையினர் மீண்டும் தமது பயிற்சியினைத் தொடர்ந்தபோது பந்து ஊடகவியளாளரின் வீட்டுக்குள் நுழைந்தது. இந் சந்தர்ப்பத்தில் மீண்டும் இப் பிரச்சனை தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு எமது கழக வீரர்கள் 3 பேர் சிறைச்சாலைக்குச் சென்றனர். சில நாட்கள் சிறைச்சாலையில் வைக்கப்பட்டு மீண்டும் விடுதலை செய்யப்பட்டனர். தொடர்ந்து எமது ஆலயசபை உறுப்பினர்கள் சட்டத்துறையினரின் உதவியுடன் மீண்டும் எமது கழக மைதானத்தில் இளைஞர்களை விளையாடுவதற்கான அனுமதியினைப் பெற்றுக் கொடுத்து விளையாட்டு தொடர்ந்து நடைபெற்று வந்தது. கடந்த 2014ம் ஆண்டு மைதானத்தைச் சுற்றி வலை அமைப்பதற்காக வருகை தந்த எமது மன்னார் மாவட்ட சகோதரர் ஒருவர் மற்றும் எமது கழக உறுப்பினர்கள் மூவர் மைதானத்தை அளவை செய்தமைக்காக மீண்டும் வழக்குப் பதிவு செய்யப்பட்டு நீதி மன்றம் சென்று திரும்பினர். இதன்போது எமது பங்குத் தந்தையாக இருந்த அருட்.தந்தை. டெஸ்மன் குலாஸ் அவர்கள் தலையிட்டு இச் சட்டப் பிரச்சனையினை சட்டத்தரணிகள் மூலம் தீர்த்து வைத்தார்.
இவ்வாறு தொன்று தொட்டு இவ் ஊடகவியலாளரின் குடும்பம் எம் ஊர் மக்களை உளவியல் ரீதியான பாதிப்பையும் மனச் சோர்வினையும் உண்டாக்கினர் பின்னர் இறுதியாக நீதி மன்றம் வழங்கிய தீர்ப்பில் கழக உறுப்பினர்கள் தொடர்ந்து விளையாடலாம் அத்துடன் பொதுத் தேவைக்கும் பயன்படுத்தலாம் என தீர்ப்பு வழங்கப்பட்டது. நாங்கள் விளையாடுகின்ற பந்து அருகாமையில் இருக்கின்ற 5 வீடுகளுக்குள்ளும் செல்கின்றபோதும் எமக்கு எந்தப் பிரச்சனையும் ஏற்படவில்லை. எமது பிரச்சனைக்கு தீர்வு கிடைத்து விட்டது என நிம்மதியான விளையாடிய போதும் எமது பந்து ஊடகவியலாளரின் வீட்டுக்குள் செல்கின்றபோது இப் பந்துகள் மீண்டும் எமது கரங்களுக்கு கிடைக்காமை மிகுந்த மனச்சோர்வை ஏற்படுத்தியது. இவ்வாறு 20 க்கு மேற்பட்ட பந்துகள் அவருடைய வீட்டுக்குள் இருப்பது குறிப்பிடத்தக்கது. எமது புதிய பங்குத்தந்தை அருட். தந்தை.நவரட்னம் அடிகளார் பல விதமான பேச்சு வார்த்தையில் ஈடுபட்டும் தமது விடாப்பிடியான கொள்கையில் இருந்து அவர்கள் மீளவில்லை என்பது எமக்கு தெளிவானது.
இதன் பின் மைதானத்தை பயன்படுத்தி வந்த நாங்கள் சம்பவம் நடை பெற்ற அன்று எமது பெரிய மைதானத்தில் கிரிக்கட் சுற்றுப் போட்டியை நடாத்தி வந்தோம் சரியாக நேரம் 5.45 ஆக இருந்தபோது இந்தப் போட்டியின் இறுதி நிகழ்வில் கலந்து கொள்ள அருட் சகோதரிகள் மற்றும் எமது பங்குத் தந்தையும் வருகை தந்து இருந்தனர் சரியாக நேரம் 6 மணியாகியபோது எமது பங்குத் தந்தையின் உரை இடம் பெற்றது அப்போது கரப்பந்தாட்ட மைதானத்தில் பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டு இருந்த வீரர் ஒருவர் எங்களை நோக்கி ஓடி வந்தார்.
நாங்கள் 19 வயதுக்கு உட்பட்ட வீரர்கள் பயிற்சியினை மேற்கொண்டு கொண்டு இருந்தபோது ஊடக வியலாளர் எங்களை ஒளிப்பதிவு செய்து கொண்டு இருக்கின்றார் என்று எங்களிடம் கூறினார். இவ் நிகழ்வு முடியும் வரையில் அவரை அமைதியாக இருக்கும் படி கூறினேன். பின் நான் பங்குத் தந்தையுடன் கதைக்க வேண்டும் என்றார். நாங்கள் சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுத்தோம். பங்குத் தந்தையும் கழக உறுப்பினர்களும் கரப்பந்தாட்ட மைதானத்திற்குச் சென்றனர்.
நாங்கள் 19 வயதுக்கு உட்பட்ட வீரர்கள் பயிற்சியினை மேற்கொண்டு கொண்டு இருந்தபோது ஊடக வியலாளர் எங்களை ஒளிப்பதிவு செய்து கொண்டு இருக்கின்றார் என்று எங்களிடம் கூறினார். இவ் நிகழ்வு முடியும் வரையில் அவரை அமைதியாக இருக்கும் படி கூறினேன். பின் நான் பங்குத் தந்தையுடன் கதைக்க வேண்டும் என்றார். நாங்கள் சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுத்தோம். பங்குத் தந்தையும் கழக உறுப்பினர்களும் கரப்பந்தாட்ட மைதானத்திற்குச் சென்றனர்.
அங்கு பயிற்சியில் இருந்த 19 வயதுக்கு உட்பட்ட பாடசாலை மாணவர்கள் பயிற்சியை விட்டு விட்டு அமைதியாக நின்றனர். காரணம் ஒளிப்பதிவு செய்தமையே எனக் கூறினர். இவர்களுக்கு வருகின்ற 6.7.2015 அன்று கரிசல் கிராமத்தில் 19 வயதுக்கு உட்பட்ட வீரர்களுக்கான கரப்பந்தாட்ட போட்டி நடைபெற இருப்பதால் அப்போட்டியில் பங்கு பெற ஆயத்தம் செய்யுமாறு இவர்களிடம் கூறியிருந்தோம். இச் சந்தர்ப்பத்தில் இங்கு நின்றவர்கள் அனைவரும் 19 வயதுக்கு உட்பட்ட மாணவர்கள் இவர்கள் மது போதையில் மக்களுக்கு இடையூறு விளைவித்ததாக தவறான செய்தி குறிப்பிடப்பட்டிருந்தது குறிப்பிடத் தக்கது.
இவர்கள் யாரும் மது அருந்துபவர்கள் அல்ல என்பதை புரிந்து கொள்ள வேண்டும். இதன் பின்னரே கிராம மக்கள் மற்றும் ஊடக வியலாளருக்கும் இடையில் எடுத்த புகைப்படம் மற்றும் ஒளிப்பதிவுகளை அழிக்குமாறு கூறினர். அதன் பின்னரே தகராறு இடம் பெற்றது. அத்துடன் ஊடகவியலாளரின் மகனும் சில தவறான வார்த்தையைப் பங்குத் தந்தை மற்றும் பங்கு மக்களுக்கு எதிராக பிரயோகங்களை மேற்கொண்டமை இங்கு குறிப்பிடத்தக்கது. இதனால் ஆத்திரமுற்ற மக்கள் எமது கிராம வழக்கப்படி ஆலய மணியை ஒலிக்கச் செய்து பலத்த கோசங்களுடன் பிரச்சனையுடன் சம்பந்தப்பட்ட இடத்தை வந்து அடைந்தனர்.
இவ் வேளையில் காவல்துறையினர் ஊடகவியலாளரின் குடும்பத்தினருக்கு பாதுகாப்பு வழங்கியமை குறிப்பிடத்தக்கது. பின் ஊடகவியலாளரின் மகனை பங்குத் தந்தையிடம் மன்னிப்பு கேட்குமாறு மக்களினால் கூறப்பட்டது. ஊடகவியலாளரின் மகன் பொது மக்கள் முன்னிலையில் எமது பங்குத் தந்தையிடம் மன்னிப்பு கேட்டபின் மக்கள் சிறிறு நேரத்தின் பின் ஆலய வளாகத்தில் ஒன்று கூடி சில தீர்மானங்களை எழுத்து வடிவமாக்குவதற்கான ஆயத்தம் செய்த பின் தமது வீடுகளுக்கு இரவு சரியான 11 மணியளவில் கலைந்து சென்றனர். இதுவே 28.6.2015 அன்று எமது மண்ணில் இடம் பெற்ற சம்பவமாகும்.
அவரைத் தாக்க வேண்டிய அவசியம் எமது மக்களுக்கு இல்லை. ஏனெனில் அவர் எமது கிராமத்தின் பொதுவான சட்டதிட்டங்களுக்கு அமைந்து நடந்தால் அவரும் எமது கிராமத்தின் குடிமகனாவார். அதனை விடுத்து பாடசாலையில் கல்வி பயில்கின்ற மாணவர்களின் மனதில் அச்சத்தை ஏற்படுத்துவதை எப்படி தலைமன்னார் கிராம மக்கள் அவரைத் தாக்க நினைத்தார்கள் எனக் கூறுவது.
இது ஒரு தவறான செய்தியாகும். இம்மைதானமானது தொழில் முடிந்து மிகுந்த உடல் கலைப்புடன் வரும் எம் மண்ணின் தொழிலாளர்கள் சிறிது நேரம் எமது இளைஞர்களின் விளையாட்டுத் திறனை ஊக்கப்படுத்துவதுடன் மனக் கவலைகளையும் தீர்த்துக் கொள்வதற்கு இவ் அமைவிடம் மிகவும் பொருத்தமான ஒரு இடமாகும்.
இதனால் எம் மண்ணின் மக்களுக்கு எந்தத் தீங்கும் இல்லை என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். இது வரையில் எமது மண்ணின் மைந்தர்கள் யாரும் இம் மைதானத்தினால் எமக்குத் தொந்தரவு என யாரும் குறிப்பிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அத்துடன் ஊடகத்துறையின் உரிமையினை மதிக்கும் எமது பங்குத் தந்தையிடமும் சில விடயங்களைத் தெளிவுபடுத்தி உங்களுடைய செய்திகளை வெளியிடுமாறு அன்பாகக் கேட்டுக் கொள்கின்றோம்.
இவர்கள்
தலைமன்னார் மேற்கு குடிமக்கள்
புனித லோறன்சியார் விளையாட்டுக்கழகம் ..
தொடர்புடைய செய்தி
மன்னார் மாவட்டத்தின் சிரேஸ்ட ஊடகவியலாளர் வாஸ்கூஞ்ஞ மீது தலைமன்னாரில் வைத்து தாக்குதலை மேற்கொள்ள முயற்சி.
http://www.newmannar.com/2015/06/28.html
புனித லோறன்சியார் விளையாட்டுக்கழகம் ..
தொடர்புடைய செய்தி
மன்னார் மாவட்டத்தின் சிரேஸ்ட ஊடகவியலாளர் வாஸ்கூஞ்ஞ மீது தலைமன்னாரில் வைத்து தாக்குதலை மேற்கொள்ள முயற்சி.
http://www.newmannar.com/2015/06/28.html
மன்னார் இணையத்தில் (Newmannar.com)பிரசுரிக்கப்பட "ஊடக வியலாளரை தலைமன்னாரில் வைத்து தாக்குவதற்கான முயற்சி" என்ற செய்திக்கு மறுப்பு தெரிவிக்கும் கிராமமக்கள் -photos
Reviewed by NEWMANNAR
on
July 01, 2015
Rating:

No comments:
Post a Comment