மன்னார் லோறன்ஸ் விளையாட்டுக் கழகத்தினால் உண்ணாவிரதப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது -Photos
தலைமன்னார் பகுதி இளைஞர்கள் தொடர்பில் ஊடகவியலாளர் ஒருவர் வெளியிட்ட செய்திக்கு எதிர்ப்பு தெரிவித்து,நேற்று (ஞாயிற்றுக்கிழமை) தலைமன்னார் கிராமத்தில் எதிர்ப்பு நடவடிக்கையொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அப்பகுதி மக்களுக்கும், ஊடகவியலாளரின் குடும்பத்தினரிற்கும் இடையிலுள்ள விளையாட்டு மைதான காணி தொடர்பிலான தனிப்பட்ட பிரச்சனை ஒன்றின் காரணமாவே அவர் அப்பகுதி இளைஞர்கள் தொடர்பில் செய்தியினை வெளியிட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் குற்றம் சுமத்தியிருந்தனர்.
இந்நிலையில் தலைமன்னார் கிராமத்திலுள்ள மக்கள் அனைவரும் தேவாலயத்தில் நடந்த மத வழிபாடுகளைத் தொடர்ந்து அமைதியான முறையில் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
அந்த கிராமத்தில் உள்ள அனைத்து மக்களும் ஒன்று திரண்டு இந்த எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அத்துடன் தலைமன்னார் கிராமத்திலுள்ள தனியார் பேரூந்துகள் நேற்றைய தினம் சேவையில் ஈடுபடவில்லை.
இந்த அமைதிப்போராட்டத்தில் வடக்கு மாகாண அமைச்சர் டெனிஸ்வரன், வட மாகாண சபை உறுப்பினர் சிராய்வா உள்ளிட்டவர்களும் கலந்து கொண்டிருந்தனர்.
மன்னார் லோறன்ஸ் விளையாட்டுக் கழகத்தினால் உண்ணாவிரதப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது -Photos
Reviewed by NEWMANNAR
on
July 06, 2015
Rating:

No comments:
Post a Comment