அண்மைய செய்திகள்

recent
-

கரவலை தொழிலில் ஈடுபடும் மன்னார் மீனவர்கள்.-Photos

மன்னார் மாவட்டத்தில் தற்போது கடற்றொழில் நடவடிக்கைகள் பாதிப்படைந்துள்ள நிலையில் மீனவர்கள் தமது அன்றாட தேவையினை பூர்த்தி செய்து கொள்ளுவதற்காகவும்,நாளாந்த வருமானத்தை சற்று ஈட்டிக்கொள்ளுவதற்காகவும் கரவலை தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.

கரையோரப்பகுதிகளில் கடந்த மே மாதம் முதல் பருவக்காற்று மிக வேகமாக வீசிவருகின்றமையினால் மீனவர்களின் கடற்தொழில் நடவடிக்கைகள் பாதி க்கப்பட்டுள்ளது.

இதனால் நாளாந்தம் மன்னார் மாவட்ட மீனவர்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.

குறித்த பருவக்காற்றை மீனவர்கள் சோளக்காற்று என கூறுகின்றனர்.குறித்த பருவக்காற்று மே மாதம் முதல் ஒக்டோபர் மாதம் வரையிலான சுமார் 06 மாதங்கள் வரை கடல் சார் கரையோரப்பிரதேசங்களில் வீசும்.

இதனால் குறித்த 06 மாத காலங்களிலும் மீனவர்கள் கடற்தொழில் நடவடிக்கைகள் பாதிப்படையும்.

தற்போது குறித்த பருவக்காற்றின் வேகம் அதிகரித்துள்ளதாகவும் மீனவர்கள் எதிர்வு கூறுகின்றனர்.

இதனால் ஆழ்கடலுக்குச் செல்வதை குறைத்து கரவலை தொழிலை மீனவர்கள் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.பல மீனவர்கள் ஒன்றிணைந்து கரவலை தொழிலை மேற்கொள்ளுகின்ற போது குறைந்த அளவிலே மீன் பிடிபடுவதாக மீனவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.






கரவலை தொழிலில் ஈடுபடும் மன்னார் மீனவர்கள்.-Photos Reviewed by NEWMANNAR on July 01, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.