அண்மைய செய்திகள்

recent
-

வெளி மாகாணங்களில் உள்ள அரசியல் கைதிகளின் உறவினர்களுக்கும் வடமாகாண அமைச்சர் பா.டெனிஸ்வரனுக்கும் இடையில் விசேட சந்திப்பு-Photos

வடமாகாணம் தவிர்ந்த ஏனைய மாகாணங்களில் உள்ள அரசியல் கைதிகளின் உறவினர்களுக்கும் வடமாகாண மீன்பிடி,போக்குவரத்து அமைச்சர் பா.டெனிஸ்வரனுக்கும் இடையில் இன்று(29) புதன்கிழமை காலை 10.30 மணியளவில் மன்னாரில் உள்ள அமைச்சரின் உப அலுவலகத்தில் விசேட சந்திப்பு இடம் பெற்றது.

-இதன் போது வடமாகாணம் தவிர்ந்த ஏனைய மாகாணங்களில் உள்ள அரசியல் கைதிகளின் குடும்பங்கள் எதிர் நோக்கும் பொருளாதார ரீதியிலான பிரச்சினைகளை ஈடு செய்யும் வகையில் அவர்களுக்கு சுய உதவிகளை வழங்கும் வகையில் முதற்கட்டமாக விபரங்கள் பெற்றுக்கொள்ளப்பட்டது.

-இதன் போது கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள ஏனைய மாகாணங்களைச் சேர்ந்த அரசியல் கைதிகளின் பெற்றோர்,மனைவி,பிள்ளைகள்,உறவினர்கள் என பலர் வருகை தந்து அமைச்சரை சந்தித்து தமது பிரச்சினைகளை தெழிவு படுத்தினர்.

-இதன் போது அரசியல் கைதிகளின் பெற்றோர்,மனைவி,பிளளைகள் ஆகியோரின் பொருளாதாரத்தை கருத்தில் கொண்டு அவர்களின் வருவாயை உயர்த்திக்கொள்ள மேற்கொள்ளப்பட வேண்டிய வேளைத்திட்டங்கள் தொடர்பில் ஆராயப்பட்டது.

-எனினும் தமக்கு எவ்வித உதவிகளும் வேண்டாம் எனவும் அரசியல் கைதிகளாக தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களை விடுதலை செய்ய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வருகை தந்த அரசியல் கைதிகளின் பெற்றோர்,மனைவி,பிள்ளைகள்,உறவினர்கள் அமைச்சரிடம் கோரிக்கை விடுத்தனர்.
-இதன் போது தடுத்து வைக்கப்பட்டுள்ள முஸ்ஸிம் அரசியல் கைதிகளின் உறவினர்களும் வருகை தந்திருந்தனர்.

-இதே வேளை வடமாகாணத்தில் 12 ஆயிரத்து 676 பேர் உதவித்திட்டங்களை பெற்றுக்கொள்ள விண்ணப்பித்துள்ளதாக வடமாகாண அமைச்சர் பா.டெனிஸ்வரன் தெரிவித்தார்.

-இவர்களில் 1 ஆவது விண்ணப்பமான புனர்வாழ்வு பெற்ற முன்னாள் போரளிகள் 6 ஆயிரத்து 322 பேரும்,2 ஆவது விண்ணப்பமாக பிள்ளைகளை இழந்த குடும்பங்கள் 6 ஆயிரத்து 322 பேரூம்,3 ஆவது விண்ணப்பமாக வடமாகாண தமிழ் அரசியல் கைதிகள் 324 பேரூம் இவ்வாறு விண்ணப்பித்துள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

இவர்களுக்கான உதவித்திட்டங்களை வழங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும்,இவர்களுக்கு மேலும் உதவிகளை வழங்க புலம் பெயர் தமிழர்கள் முன் வந்துள்ளதாகவும் அமைச்சர் பா.டெனிஸ்வரன் மேலும் தெரிவித்தார்.







வெளி மாகாணங்களில் உள்ள அரசியல் கைதிகளின் உறவினர்களுக்கும் வடமாகாண அமைச்சர் பா.டெனிஸ்வரனுக்கும் இடையில் விசேட சந்திப்பு-Photos Reviewed by NEWMANNAR on July 29, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.