மடு அன்னையின் ஆடித்திருவிழா நாளை.
மன்னார் மடு அன்னையின் ஆடித் திருவிழா திருப்பலி நாளை (2) வியாழக்கிழமை காலை 6.15 மணிக்கு யாழ் மறைமாவட்ட ஆயர் தோமஸ் சௌந்தர நாயகம் தலைமையில் ஒப்புக்கொடுக்கப்படவுள்ளது.
-மடு திருத்தளத்தின் ஆடித்திருவிழாவிற்கான ஆயத்தங்கள் இடம் பெற்ற நிலையில் கடந்த யூன் மாதம் 23 ஆம் திகதி கொடியேற்றத்துடன் நவநாள் திருப்பலிகள் ஆரம்பமானது.
-தொடர்ச்சியாக நவ நாள் திருப்பலிகள் இடம் பெற்று வந்த நிலையில் இன்று (1) புதன் கிழமை 1 ஆம் திகதி மாலை 6.15 மணிக்கு வேஸ்பர் நற்கருணை ஆராதணையும்,நாளை வியாழக்கிழமை காலை 6.15 மணிக்கு திருவிழா திருப்பலியும் ஒப்புக்கொடுக்கப்படும்.
யாழ் மறைமாவட்ட ஆயர் தோமஸ் சௌந்தர நாயகம் தலைமையில் சிலாபம் மறைமாவட்ட ஆயர் வலன்ஸ் மென்டிஸ்,அனுராதபுரம் மறைமாவட்ட ஆயர் நோபட் அன்ராடி ஆகியோர் இணைந்து கூட்டுத்திருப்பலியாக திருவிழா திருப்பலியை ஒப்புக்கொடுக்கவுள்ளனர்.
-இந்த நிலையில் மடு திருத்தளத்தின் ஆடி மாத திருவிழாவிற்காண சகல விதமான ஏற்பாடுகளும் ஏற்கனவே மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மடுத்திருத்தளத்தின் பரிபாலகர் அருட்தந்தை எஸ்.எமிலியானுஸ் பிள்ளை தெரிவித்தார்.
மடு அன்னையின் ஆடித்திருவிழா நாளை.
Reviewed by NEWMANNAR
on
July 01, 2015
Rating:

No comments:
Post a Comment