அப்துல் கலாமின் உடல் இராமேஸ்வரம் கொண்டு செல்லப்பட்டது...

மக்களின் ஜனாதிபதி மற்றும் இந்திய ஏவுகணையின் தந்தையுமான முன்னாள் இந்திய ஜனாதிபதி அப்துல் கலாம், நேற்று முன்தினம் மேகலாயாவின் ஷில்லாங் நகரில் ஐ.ஐ.எம். மையத்தில் மாணவர்கள் மத்தியில் உரையாடி கொண்டிருந்த போது மாரடைப்பின் காரணமாக உயிரிழந்தார்.
நேற்று காலை கலாம் அவர்களின் உடல் டெல்லி கொண்டுவரப்பட்டது. அங்கு ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் மலர் அஞ்சலி செலுத்தினர்.
இறுதி சடங்கிற்காக அப்துல் கலாம் அவர்களின் உடல், சிறப்பு விமானம் மூலம் டெல்லியிலிருந்து இன்று காலை மதுரைக்கு கொண்டுசெல்லப்பட்டு பின் அங்கிருந்து ஹெலிகொப்டர் மூலம் இராமேஸ்வரத்தில் உள்ள அவரது அண்ணன் வீட்டிற்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு அவரின் உறவினர்கள் அஞ்சலி செலுத்திய பின், மக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக அவரது உடல் ராமேஸ்வரம் பஸ் நிலையம் அருகிலுள்ள மைதானத்திற்கு கொண்டு செல்லப்படும். பின் வீட்டருகிலுள்ள பள்ளிவாசலில் சிறப்பு தொழுகை நடத்தப்படவுள்ளது.
நாளை இராணுவ மரியாதையுடன் கலாம் அவர்களின் உடல் காலை 11 மணியளவில் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு அடக்கம் செய்யப்படும். கலாமின் இறுதிச்சடங்கில், அரசியல் தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள், ஏராளமான பொதுமக்கள் கலந்து கொள்வார்கள் என்பதால் ராமேஸ்வரத்தில் பலத்த பாதுகாப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
அப்துல் கலாமின் உடல் இராமேஸ்வரம் கொண்டு செல்லப்பட்டது...
Reviewed by Author
on
July 29, 2015
Rating:

No comments:
Post a Comment