இரத்தினபுரியில் பெறுமதிமிக்க புராதன சிவலிங்கம் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது
இரத்தினபுரி ஹிதெல்லன பரடைஸ் தோட்டத்தில் புராதன தொல் பொருள் பெறுமதிமிக்க சிவலிங்கம் ஒன்று கிடைத்துள்ளது.
பூமிக்கு அடியில் சுமார் 150 அடி ஆழத்தில் இந்த சிவலிங்கம் காணப்பட்டதாகவும் மாணிக்கக்கல் சுரங்கம் ஒன்றை தோண்டும் போதே இது தென்பட்டுள்ளதாகவும் காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.
சுமார் இரண்டு தொன் எடைகொண்ட இந்த சிவலிங்கம், கருங்கல்லினால் செதுக்கப்பட்டுள்ளது. அகழ்ந்தெடுக்கப்பட்ட இச் சிவலிங்கம் தற்போது இரத்தினபுரி சிவ ஆலயத்தில் வைக்கப்பட்டுள்ளது.
முற்காலத்தில் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக இந்த லிங்கம் மண்ணுக்குள் புதைந்திருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த சிவலிங்கத்திற்கு அப்பால் ஒரு மாணிக்கல்லும் இருந்துள்ளது.
இரத்தினபுரியில் பெறுமதிமிக்க புராதன சிவலிங்கம் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது
Reviewed by NEWMANNAR
on
August 05, 2015
Rating:

No comments:
Post a Comment