எதிர்க்கட்சி தலைமை பதவி சம்பந்தனுக்கு - மனோ...
அமைந்துள்ள பாராளுமன்றத்தின் எதிர்க்கட்சி தலைவர் பதவி தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் ஆர். சம்பந்தனுக்கு வழங்கப்பட வேண்டும் என்று ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
அவ்வாறு வழங்கப்படுமிடத்தில், இந்நாட்டின் அரசியலுக்கு அது ஒரு எடுத்துக்காட்டாக அமையும் என்று மனோ கணேசன் குறிப்பிட்டார்.
அதன் மூலம் மத்திய அரசில் பங்கு வகிக்கும் ஒரு கட்சியாக தமிழ் தேசிய கூட்டமைப்பு அமையும் என அவர் சுட்டிக்காட்டினார்.
நடந்து முடிந்த தேர்தலில் அதிக ஆசனங்களைப் பெற்ற ஐ.தே.க. மற்றும் ஶ்ரீ.ல.சு.க ஆகியன இணைந்து தேசிய அரசாங்கம் அமைப்பதற்கு உடன்பட்டுள்ளதால் எதிர்க்கட்சி தலைவர் பதவி அதற்கு அடுத்து அதிக ஆசனங்களை கைப்பற்றியுள்ள தமிழ்த் தேசிய கூட்டமைப்பிற்கே கிடைக்க வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சி தலைவர் பதவிக்கு குமார வெல்கமவை நியமிக்க வேண்டும் என கோரி 56 சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் கையொப்பமிட்ட கோரிக்கை ஒன்றும் முன்வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
எதிர்க்கட்சி தலைமை பதவி சம்பந்தனுக்கு - மனோ...
Reviewed by Author
on
September 02, 2015
Rating:

No comments:
Post a Comment