வடக்கு மாகாணத்தில் முதற் தடவையாக“தகவல் அறியும் உரிமை”விழிப்புணர்வு கருத்தரங்கு செயலமர்வு-10-10-2015
வடக்கு மாகாணத்தில் முதற் தடவையாக வடக்கு மாகாணத்தினை சேர்ந்த அனைத்து ஊடகவியலாளர்களுக்கும் பொது அமைப்பினர்கள் சமூக அமைப்புக்கள் பிரதி நிதிகள் உறுப்பினர்களுக்கான “தகவல் அறியும் உரிமை”விழிப்புணர்வு கருத்தரங்கு செயலமர்வு ஊடக ஊழியர்களின் தொழிற்சங்க சம்மேளனத்தின் பொதுச்செயலாளர் லங்கா பெல்லி அவர்களின் தலமையில் இன்று 10-10-2015 காலை-10-30 மணியளவில் பரந்தன் பொது நோக்கு மண்டபத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்விற்கு வருகை தந்தவர்களாக முன்னாள் பா.உ.சுரேஸ்பிரேமச்சந்திரன் அவர்களும் வடக்கு மாகாண சபை உறுப்பினர் ஆனந்தி சசிதரன் அவர்களும் கருத்துரைகளை வழங்கிய யாழ் பல்கலைக்கழக சட்டத்துறை விரிவுரையாளர் கோசலை மதன் அவர்களும் ஊடகத்துறை விரிவுரையாளராக கலாநிதி.ரகுராம் அவர்களும் யாழ் பல்கலைக்கழக சட்டத்துறை விரிவுரையாளரான விமல் சாமிநாதன் அவர்களோடு வடக்கு மாகாணத்தின் ஐந்து தூண்களாக விளங்கும் ஐந்து மாவட்டங்களையும் பிரதிபலிக்கின்ற பிரதி நிதிகளான ஊடகவியலாளர்கள் அமைப்புக்களின் உறுப்பினர்கள் பிரதி நிதிகள் கலந்து சிறப்பித்தனர்.
இந்நிகழ்வின் கருப்பொருளாக தகவல் அறியும் உரிமை யாருக்காக…? ஏதற்காக…? எனும் கேள்விக்கு மக்களுக்காக சுகந்திரமான ஜனநாயகத்தின் வாழும் மக்களின் வாழ்வின் அங்கமாக விளங்குகின்ற ஊடகங்களின் செயற்பாடுகள் நல்ல முறையில் இருக்க வேண்டும் என்பதோடு மக்களுக்க விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் சட்டத்தின் உள்ளவற்றினை தெளிவு படுத்தி அறிந்து கொள்ளவும் அதேநேரம் இலங்கையில் இச்சட்டம் அமுலுக்கு விரைவாக கொண்டு வருவதற்கு ஏற்றவாறு இப்படியான விழிப்புணர்வு கருத்தமர்வுகள் நாடுபூராக தொடர்ச்சியாக நடைபெறவேண்டும் என்பதே இன்றைய சந்திப்பின் பிரதான நோக்கமாக அமைந்தது…
இந்நிகழ்வினை ஏற்பாடு செய்தவர்கள்;-
வடமாகாண தொழில்சார் ஊடகவியலாளர் சங்கம்…
ஊடக ஊழியர்களின் தொழிற்சங்க சம்மேளனம்…
வடக்கு மாகாணத்தில் முதற் தடவையாக“தகவல் அறியும் உரிமை”விழிப்புணர்வு கருத்தரங்கு செயலமர்வு-10-10-2015
Reviewed by Author
on
October 10, 2015
Rating:
No comments:
Post a Comment