மன்னார் வளைகுடா கடற்பகுதியில் தமிழக மீனவர்கள் வலையில் சிக்கிய ராட்சத இரும்பு உருளை
பாம்பன் அருகே உள்ள கடல்பகுதியில் தமிழக மீனவர்கள் வலையில் சிக்கிய இரும்பு உருளை குறித்து பாதுகாப்பு வட்டாரங்கள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
தமிழகத்தின் இராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் முந்தல்முனை துறைமுகப் பகுதியிலிருந்து மன்னார் வளைகுடா கடல் பகுதியில் மீன்பிடிக்கச் சென்ற பாம்பன் பகுதி மீனவர்களின் வலையில் ராட்சத இரும்பு உருளை சிக்கியது.
இதனால் வலை சேதமடைந்த நிலையில் கரைக்கு கொண்டுவந்து சேர்த்தனர். இதனையடுத்து கடலோர பொலிஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து பொலிஸார் இரும்பு உருளையை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
சுமார் 15 நீளமும் 4 அடி விட்டமும் கொண்ட உருளை சுமார் ஐந்து டன் எடை கொண்டதாக இருக்கும் என பொலிஸார் தகவல் தெரிவித்துள்ளனர்.
மீனவர்கள் வலையில் சிக்கிய இரும்பு உருளை கப்பல்களில் மிதவையாகவோ அல்லது எரிபொருள் நிரப்பப்படும் உருளையாகவோ பயன்படுத்தப்பட்டிருக்கலாம் எனவும் தெரியவந்துள்ளது.
மேலும் உருளையில் கேஸ் நிரப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளதால் பொலிஸார் உருளையை பாதுகாப்பான இடத்தில் வைத்து பாதுகாத்து வருகின்றனர்.
கடந்த 13 ந் திகதி ராமேஸ்வரம் நரிக்குழி கடல்பகுதியில் மர்மான முறையில் இலங்கையைச் சேர்ந்த பைபர் படகு கரை ஒதுங்கியது.
குறித்து இதுவரை எந்த தகவலும் தெரியாத நிலையில் மீண்டும் ராட்சத இரும்பு உருளை சிக்கியது இராமநாதபுரம் கடலோரப்பகுதிகளில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
முந்தல்முனை மீனவர் பொன்னுசாமி இது தொடர்பாக கருத்துத் தெரிவிக்கையில்,
மீன்பிடித்து க்கொண்டிருந்த போது இரவு மன்னார்வளைகுடா கடல்பகுதியில் அமைந்துள்ள குரசடைத்தீவு அருகே வலையில் சிக்கியது.
இதனால் எங்களது வலை சேதமடைந்தது. மேலும் அதனை கரைக்கு கொண்டுவந்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளோம் என்றார்.
மன்னார் வளைகுடா கடற்பகுதியில் தமிழக மீனவர்கள் வலையில் சிக்கிய ராட்சத இரும்பு உருளை
Reviewed by NEWMANNAR
on
October 20, 2015
Rating:

No comments:
Post a Comment