அரச கரும மொழிகள் பரீட்சையில் அரைவாசிக்கும் மேற்பட்டோர் சித்தியடையவில்லை
அரச கரும மொழிகள் திணைக்களத்தினால் நடத்தப்பட்ட பரீட்சையில் தோற்றியவர்களில் அரைவாசிக்கும் மேற்பட்டோர் தோல்வியடைந்துள்ளனர்.
அரச ஊழியர்கள் மத்தியில் புரிந்துணர்வை ஏற்படுத்துவதற்கும், பொதுமக்களுக்கு செயற்திறன் மிக்க சேவையை வழங்கும் நோக்கிலும் அரச கரும மொழிகள் பரீட்சை நடத்தப்படுகின்றது. இதில் சிங்கள ஊழியர்களுக்குத் தமிழும், தமிழ் விண்ணப்பதாரிகளுக்கும் சிங்களமும் பரீட்சிக்கப்படுகின்றது.
இந்த ஆண்டு இப்பரீட்சைக்குத் தோற்றிய 38 ஆயிரம் பேரில் பதினாறாயிரம் பேர் மட்டுமே பரீட்சையில் ஓரளவுக்கேனும் சித்தியடைந்துள்ளார்கள்.
ஏனைய அனைவரும் 35க்கும் குறைவான புள்ளிகளைப் பெற்று தோல்வியடைந்துள்ளதாக இலங்கைப் பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
அரச கரும மொழிகள் பரீட்சையில் அரைவாசிக்கும் மேற்பட்டோர் சித்தியடையவில்லை
Reviewed by NEWMANNAR
on
October 31, 2015
Rating:

No comments:
Post a Comment