அண்மைய செய்திகள்

recent
-

மட்டு.மாவட்டத்தில் தொடர் மழையினால் மக்களின் இயல்பு வாழ்கை பாதிப்பு...


மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த இரு தினங்களாக பெய்து வரும் தொடர் மழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்கை பாதிப்பு அடைந்துள்ளது.

நேற்று இரவு 8.30 மணிமுதல் இன்று காலை 8.30 மணிவரையான 24 மணிநேரத்தில் 182.9 மீற்றர் மழை பதிவாகியுள்ளதாக மாவட்ட வானிலை அவதான நிலைய பொறுப்பதிகாரி கே.சூரியகுமார் தெரிவித்ததர்.

இம்மாவட்டத்தில் இடைவிடாது தொடர்ந்து பெய்யும் தொடர் மழை காரணமாக பல வீதிகள் நீரில் மூழ்கியுள்ளதுடன் போக்குவரத்து செய்வதில் மக்கள் பெரும் சிரமங்களை எதிர் கொண்டுள்ளனர்.

காத்தான்குடி ஆரையம்பதி கொக்கடிச்சோலை களுவாஞ்சிக்குடி உட்பட பல பிரதேச செயலாளர் பிரிவுகளில் கடும் மழை பெய்துள்ளது.

தாழ்ந்த பகுதிகள் பல நீரில் மூழ்கியுள்ளன.


மட்டு.மாவட்டத்தில் தொடர் மழையினால் மக்களின் இயல்பு வாழ்கை பாதிப்பு... Reviewed by Author on October 25, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.