அண்மைய செய்திகள்

recent
-

நானாட்டான் பரிகாரிகண்டல் ஜீவநகர் கிராமத்தில் விளையாட்டு மைதானம் திறந்து வைப்பு.(படங்கள் இணைப்பு)

நானாட்டான் பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட பரிகாரிகண்டல் ஜீவநகர் கிராமத்தில் வீடமைப்பு மற்றும் சமூர்த்தி அமைச்சின் அனுசரனையுடன் அமைக்கப்பட்ட விளையாட்டு மைதானம் நேற்று ஞாயிற்றுக்கிழமை(25) மாலை வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டுள்ளது.

-குறித்த விளையாட்டு மைதானத்தை நானாட்டான் பிரதேசச் செயலாளர் என்.பரமதாஸ்,தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன்,வடமாகாண அமைச்சர் பா.டெனிஸ்வரன்,வடமாகாண சபை உறுப்பினர் வைத்திய கலா நிதி ஜீ.குணசீலன் ஆகியோர் இணைந்து குறித்த விளையாட்டு iமாதானத்தை வைபவ ரீதியாக திறந்து வைத்தனர்.

-இதனைத்தொடர்ந்து குறித்த மைதானத்தில் பல்வேறு நிகழ்வுகள் இடம் பெற்றது.இதன் போது அக்கிராம பிரதிநிதிகள்,கிராம மக்கள் என பலர் கலந்து கொண்டனர்.

நானாட்டான் பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட பரிகாரிகண்டல் ஜீவநகர் கிராமத்தில் சுமார் 30 வருடங்களின் பின் இடம் பெறும் முதல் நிகழ்வு குறித்த மைதானம் திறப்பு விழா மற்றும் அங்கு இடம் பெற்ற நிகழ்வுகள் என கிராம மக்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளமை சிறப்பு அம்சமாகும்.

(மன்னார் நிருபர்)

(26-10-2015)










நானாட்டான் பரிகாரிகண்டல் ஜீவநகர் கிராமத்தில் விளையாட்டு மைதானம் திறந்து வைப்பு.(படங்கள் இணைப்பு) Reviewed by NEWMANNAR on October 26, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.