மன்னாரில் இன்று சாதனையாளர் தினம் 25-11-2015....
மாகாண தேசிய மட்டங்களில் சாதனை புரியும் மாணவமாணவிகளை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வானது வருடாவருடம் நடைபெறுகின்றது. மன்னாரில் மூன்றாவது தடவையாக 2014 மற்றும் 2015 ஆண்டிற்கான 23405 மாணவர்களை கொண்ட மன்னார் வலையத்தினில் உள்ள பாடசாலைகளில் இருந்து 225 சாதனை புரிந்த மாணவமாணவிகளை(புலமைப்பரிசில்-சாதாரணதரம்-உயர்தரம்-தமிழ் தினம் ஆங்கிலதினம் -விஞ்ஞானப்போட்டிகள் ஒலிம்பியாட் சித்திரப்போட்டிகள் விளையாட்டுப்போட்டிகள்) என்பனவற்றில் சாதனை நிலைநாட்டிய மாணவமாணவிகளை பாராட்டி கௌரவப்படுத்தும் நிகழ்வானது மிகவும் சிறப்பாக நடைபெற்றது…
இந்நிகழ்விற்கு பிரதமா விருந்தினர்களாக….
அ.பத்திநாதன் பிரதம செயலாளர் வடமாகாணம்
இ.இரவீந்திரன் செயலாளர் கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சு.
இவர்களோடு மேலதிக கல்விப்பணிப்பாளர் மற்றும் கோட்டக்கல்விப்பணிப்பாளர்கள் உதவிப்பணிப்பாளர்கள் உயர் அதிகாரிகள் பாடசாலை அதிபர்கள் ஆசிரியர்கள் மாணவச்செல்வங்கள் பெற்றோர்கள் என அனைவரும் கலந்து கொண்டனர்…
இந்நிகழ்வின் சாரம்சமாக விருந்தினர்கள் உரையில்
மன்னார் மாவட்டமானது 2014-2015ம் ஆண்டுகளில் புரிந்த
சாதனைகளாக----
வடமாகணத்தில் க.பொ.த(சா-தரம்)பரிட்சைப்பெறுபேறுகளில் 78.4மூ இனை பெற்று முதன்மை நிலையினையும் தேசியரீதியில் 97 கல்வி வலையங்களுள் 6ம் இடத்தையும் மாவட்ட ரீதியில் மன்னார் மாவட்டம் 2ம் இடத்தினையும் பெற்று சாதனை புரிந்துள்ளது. அதே போல புலமைப்பரிசில் 78மூ அத்தோடு ஏனைய போட்டிகளிலும் விளையாட்டுத்துறையில் 2015 ஆண்டு மாகாண ரீதியில் 18 புதிய சாதனைகளில் 11 புதிய சாதனைகள் மன்னார் மாவட்ட மாணவர்களாள் நிலைநாட்டப்பட்டவை இச்சாதைகளின் தொகுப்பாக நினைவு மலர் ஒன்றும் வெளியிடப்பட்டது. இவ்வாறன சாதனைகள் தொடரவேண்டும் சாதனைகள் படைப்பது முக்கியமல்ல அந்த சாதனைகளை தக்க வைப்பதே முக்கியமாகும் சாதனைகளை அதற்காக கடுமையாக உழைத்த மாணவச்செல்வங்களை ஆசிரியர்களை அதிபர்களை வாழ்த்தியும் பாராட்டியும் நினைவுச்சின்னமும் சான்றிதழும் பரிசுப்பொருட்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டடார்கள்.
நிகழ்ச்சியை தலமையேற்று நடாத்திய மன்னார் வலையக்கல்விப்பணிப்பாளர் எம்.எம்.சியான் அவர்கள் கடந்த காலங்களைவவிட மாணவர்களின் செயற்பாடுகள் வளர்ச்சி கண்டு வருவதாகவும் அதற்காக முயற்சியினை மேற்கொள்ளும் மாணவர்களையும் ஆசிரியர்களையும் அதிபர்களையும் அதிகாரிகளையும் பெற்றோர்களையும் இந்நாளில் வாழ்த்துவதில் பெருமைகொள்கிறேன் நிகழ்வு இனிதே நிறைவேறியது….
மன்னாரில் இன்று சாதனையாளர் தினம் 25-11-2015....
Reviewed by Author
on
November 25, 2015
Rating:
No comments:
Post a Comment