அண்மைய செய்திகள்

recent
-

இலங்கைக்கான புதிய சுற்றுலா அறிவுறுத்தலை பிரித்தானியா வெளியிட்டுள்ளது...


இலங்கைக்கான புதிய சுற்றுலா அறிவுறுத்தலில் பிரித்தானிய தமிழ் குழுக்களின் தடைநீக்கலையும் சுட்டிக்காட்டியுள்ளது.
அதில் பிரித்தானியாவை தளமாகக்கொண்ட இரண்டு குழுக்களின் தடை இலங்கையில் நீக்கப்பட்டுள்ளமை சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கடந்த நவம்பர் 20ஆம் திகதியன்று இலங்கை அரசாங்கம் வெளியிட்ட அறிவித்தலில் பிரித்தானிய தமிழ் பேரவை மற்றும் உலக தமிழர் பேரவை ஆகியவற்றின் தடைகள் நீக்கப்பட்டுள்ளன. இந்த தடைநீக்கத்தை தமது சுற்றுலா அறிவித்தலில் பிரித்தானிய வரவேற்றுள்ளது.

இலங்கை அரசாங்கத்தின் இந்த நகர்வு பேச்சுவார்த்தைக்கு வழியை ஏற்படுத்தும் என்று பிரித்தானியாவின் இலங்கை உயர்ஸ்தானிகர் ஜேம்ஸ் டௌரிஸ் தெரிவித்துள்ளார்.

இலங்கை அரசாங்கத்தின் வர்த்தமானி அறிவித்தலின்படி உலக தமிழர் பேரவையின் தலைவர் வணக்கத்துக்குரிய தந்தை எஸ் ஜே இமானுவேலின் இலங்கையில் விதிக்கப்பட்டிருந்த வாழ்நாள் தடையும் நீக்கப்பட்டுள்ளமையையும் பிரித்தானிய சுற்றுலா அறிவித்தல் சுட்டிக்காட்டியுள்ளது.

இலங்கைக்கான புதிய சுற்றுலா அறிவுறுத்தலை பிரித்தானியா வெளியிட்டுள்ளது... Reviewed by Author on December 12, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.