அண்மைய செய்திகள்

recent
-

மிக பிரமாண்டமாக அமையவுள்ள கால்பந்தாட்ட அருங்காட்சியகம்: சூரிச் நகரில் ஏற்பாடுகள் தீவிரம்...


உலகில் மிக அதிகளவான ரசிகர்களால் விரும்பி பார்க்கப்படும் போட்டிகளில் கால்பந்தாட்ட போட்டிகள் நிச்சயம் இடம்பெறும்.
இந்நிலையில் சர்வதேச கால்பந்தாட்ட சம்மேளனமான பிபா, சுவிட்சர்லாந்தின் சூரிச் மாகாணத்தில் 128 மில்லியன் யூரோ செலவில் அருங்காட்சியம் ஒன்றை அமைக்கவுள்ளது.

தற்போது பணிகள் நடைபெற்று வருவதால் அடுத்த மாதம் 28ம் திகதி இந்த அருங்காட்சியகம் திறக்கப்படவுள்ளது.

இதுகுறித்து நிர்வாக இயக்குனர் ஸ்டீபன் கூறுகையில், தற்போதைய சூழலில் கால்பந்து சம்மேளனத்தின் மீது ஊழல் குற்றச்சாட்டு கூறப்பட்டுள்ளது.

அது தொடர்பான கொந்தளிப்பை மறுக்கமுடியாது. அது எளிதான கரியமும் இல்லை.

எனினும் அருங்காட்சியகத்தை சிறப்பாக உருவாக்குவது மட்டுமே தற்போது எங்களது நோக்கமாக உள்ளது என தெரிவித்துள்ளார்.

மேலும், இது தனி நபர்களுக்கான அருங்காட்சியம் அல்ல. உலக மக்களுக்கு கால்பந்தாட்டம் மூலம் கிடைத்தவை தொடர்பானவையாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.

அருங்காட்சியம் தொடர்பாக அதன் கலை இயக்குனர் டேவிட் அவுஸ்ஸில் கூறியதாவது, உண்மையான உலக கோப்பை மற்றும் 1938 ஆம் ஆண்டு உலக கோப்பையை வென்ற இத்தாலி அணியின் ஜெர்ஸி ஆடை ஆகிய இரண்டு பொருட்களை மட்டும் வைத்துகொண்டு இந்த அருங்காட்சியகத்தை கட்ட தொடங்கினோம்.

இந்த அருங்காட்சியம் கட்டுவதற்கான நிதி, அன்பளிப்பு, கடன், பொருட்களை ஏலம் விடுதல் ஆகியவற்றில் இருந்து பெறப்படுகிறது என்று கூறியுள்ளார்.

இந்த அருங்காட்சியத்தில் கால்பந்தாட்டத்தின் வரலாற்றை அறியும்வகையில் நூலகமும் அமைக்கப்படவுள்ளது.

மேலும் ஆண்டுக்கு 2 லட்சத்து 50 ஆயிரம் மக்கள் இங்கு வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.



மிக பிரமாண்டமாக அமையவுள்ள கால்பந்தாட்ட அருங்காட்சியகம்: சூரிச் நகரில் ஏற்பாடுகள் தீவிரம்... Reviewed by Author on January 14, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.