அண்மைய செய்திகள்

recent
-

தலைமன்னார் மீனவர்கள் மன்னார் கடற்தொழில் திணைக்களத்திற்கு முன் ஆர்ப்பாட்டம்-படங்கள் இணைப்பு


உள்ளூர் இலுவைப்படகுகளினால் தொடர்ச்சியாக தலைமன்னார் மீனவர்கள் பாதீப்படைந்து வருவதாகவும்,தற்போது உள்ளூர் இலுவைப்படகுகளினால் வறிய மீனவர்களின் பல இலட்சம் ரூபாய் பெறுமதியான வலைத்தொகுதிகள் சேதமாக்கப்பட்டுள்ளதாகவும் கூறி பாதீக்கப்பட்ட தலைமன்னார் மீனவர்கள் இன்று திங்கட்கிழமை (1) காலை அமைதியான முறையில் கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்றை மேற்கொண்டுள்ளனர்.

தலைமன்னார் மேற்கு மீனவர் சங்கம் மற்றும் தலைமன்னார் ஸ்ரேசன் மீனவ சங்கம் ஆகியவற்றில் அங்கம் வகிக்கும் நூற்றுக்கணக்கான மீனவர்கள் ஒன்றினைந்து இன்று திங்கட்கிழமை காலை 9.30 மணியளவில் மன்னார் மாவட்ட கடற்தொழில் மற்றும் நீரியல் வளத்துறை திணைக்களத்திற்கு பதாதைகளை ஏந்தியவாறு அமைதியான முறையில் ஊர்வலமாக வந்தனர்.
-பின்னர் சிறிது நேரம் பல்வேறு வசனங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியவாறு காணப்பட்டனர்.
-பின்னர் தலைமன்னார் மீனவர்கள் தமது கோரிக்கை அடங்கிய மகஜரை தலைமன்னார் புனித லோறன்ஸ் ஆலய சபையூடாக மன்னார் மாவட்ட கடற்தொழில் நீரியல் வளத்துறை திணைக்கள அதிகாரிகளிடம் கையளித்தனர்.
-தலைமன்னார் பகுதியைச் சேர்ந்த சுமார் 450 இற்கும் மேற்பட்ட மீனவர்கள் கடல் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.

இக் கிராம மக்கள் கடந்த பல வருடங்களாக இந்திய இழுவைப்படகுகளால் பல பாதிப்புக்களுக்கு உள்ளாகி வந்த நிலையில் தற்போது இலங்கை அரசாங்கத்தினால் பாக்கு நீரிணையின் இலங்கைக்குச் சொந்தமான கடல் வளங்களைப் பாதுகாக்கும் செயற்பாடு துரிதமாக நடை முறைப்படுத்தியமையினால் தற்போதைய சூழ்நிலையில் இந்திய இழுவைப்படகுகளின் வருகை குறைந்து காணப்பட்டமையினால் மிகுந்த நிம்மதியுடன் தமது தொழிலை மேற்கொண்டு வந்தோம்.

ஆனால் தற்போது பேசாலை மற்றும் உள்ளூர் இலுவைப்படகுகளின் வருகை தலைமன்னார் கடற்பரப்பில் அதிகரித்துள்ளது.

இதனால் தலைமன்னாரைச் சேர்ந்த அதிகலவான மீனவர்கள் தொடர்ச்சியாக பாதீப்படைந்து வருகின்றனர்.
-கடந்த சில தினங்களுக்கு முன் தலைமன்னார் கடற்பரப்பினுள் வருகை தந்த பேசாலை இலுவைப்படகுகள் எமது மீனவர்களின் வலைகளை சேதப்படுத்தியுள்ளது.

பல வலைகள் பெண்களைத் தலைமைத்துவமாகக் கொண்ட குடும்பங்களினுடையதாகும்.

இதனால் சுமார் 30 இலட்சம் ரூபாய் வரை எங்களுக்கு நஸ்டம் ஏற்பட்டுள்ளது.

இவ்விடையம் தொடர்பாக பாதீக்கப்பட்ட மீனவர்கள் தலைமன்னார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தள்ளோம்.

எனவே தொடர்ச்சியாக தலைமன்னார் மீனவர்கள் போசாலை மற்றும் உள்ளூர் இலுவைப்படகுகளினால் பாதீப்பை எதிர் கொண்டு வருகின்ற போதும் கடற்படை,பொலிஸார் மற்றும் கடற்தொழில் திணைக்கள அதிகாரிகள் இது வரை எவ்வித நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை.
-எனவே தடை செய்யப்பட்டுள்ள இலுவை மீன் பிடித் தொழிலை மேற்கொள்ளும் மீனவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு மிகவும் கஸ்டத்தின் மத்தியில் வாழ்வாதாரத்தை கொண்டு செல்லும் சிறு மீனவர்களின் நலனில் அக்கரை செலுத்த அதிகாரிகள் முன் வர வேண்டும்.

என அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.







தலைமன்னார் மீனவர்கள் மன்னார் கடற்தொழில் திணைக்களத்திற்கு முன் ஆர்ப்பாட்டம்-படங்கள் இணைப்பு Reviewed by NEWMANNAR on February 01, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.