அண்மைய செய்திகள்

recent
-

விசுவமடு இராணுவ முகாமில் கொல்லப்பட்டவரின் உடலை கண்டுபிடிப்பதில் தொடர் தோல்வி

முல்லைத்தீவு விசுவமடு பிரதேசத்தில் இராணுவ முகாமில் கடமையாற்றி கொலைசெய்யப்பட்டதாக கூறப்பட்ட நபரின் உடலை கண்டபிடிப்பதற்கான அகழ்வு பணிகள் மீண்டும் இன்று ஆரம்பிக்கப்பட்டு தோல்வியடைந்துள்ளது.
2009 ஆம் ஆண்டு விசுவமடு இராணுவ முகாமில் கடமையாற்றிய நபரொருவரை இரானுவ அதிகாரி ஒருவர் கொலைசெய்து புதைத்ததாக சந்தேகிக்கப்படும் இடத்தில் இந்த
அகழ்வு இடம்பெற்றது.

கொலைச் சம்பவத்தை நேரில் கண்ட நபரின் வாக்குமூலத்தை அடுத்து அவரையும் அழைத்து வந்தே இந்த அகழ்வு இடம்பெற்றது.

கடந்த மாதம் 9 ஆம் திகதி விசுவமடு பாடசாலைக்கு பின்புறமாகவிருந்த காணி ஒன்றில் இந்த அகழ்வு பணி இடம்பெற்றபோதும் எந்தவொரு தடயப்பொருட்களும் காணப்படவில்லை.

இந்த நிலையில் இன்று மீண்டும் அகழ்வு பணிகள் இடம்பெற்றுது. எனினும் இன்றும் எந்தவித தடயங்களுமின்றி தோல்வியில் முடிவடைந்ததுள்ளமை குறிப்பிடத்தக்கது.



விசுவமடு இராணுவ முகாமில் கொல்லப்பட்டவரின் உடலை கண்டுபிடிப்பதில் தொடர் தோல்வி Reviewed by NEWMANNAR on February 27, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.