அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் மறை­மா­வட்ட ஆழ­மான விசு­வாசம் கொண்ட பொது­நி­லை­யி­னரால் பாத­யாத்­திரை-02-03-2016



வரு­டந்­தோறும் மன்னார் மறை­மா­வட்ட அருட்­ப­ணி­யா­ளர்கள் கொண்ட நிர்­வாக குழு­வினால் மேற்­கொள்­ளப்­படும் வவு­னியா கோம­ர­சன்­குளம் கல்­வா­ரிக்­கான பாத­யாத்­திரை இவ்­வ­ருடம் இவர்­களால் மேற்­கொள்­ளப்­ப­டா­த­ போதும் ஆழ­மான விசு­வாசம் கொண்ட பொது­நி­லை­யி­னரால் இவ்­வ­ருடம் இப்­பா­த­யாத்­திரை இன்று புதன்­கி­ழமை முன்­னெ­டுக்­கப்படவுள்ளதாக இதன் ஏற்­பாட்­டா­ளர்கள் தெரி­வித்­துள்­ளனர்.
வரு­டந்­தோறும் கத்­தோ­லிக்­கர்கள் அனு­ச­ரித்­து­வரும் தவக்­கா­லத்தை முன்­னிட்டு மன்னார் வவு­னியா உள்­ள­டக்­கப்­பட்ட மன்னார் மறை­மா­வட்ட கத்­தோ­லிக்கர் வவு­னி­யாவில் அமைந்­துள்ள கோம­ர­சன்­குளம் கல்­வா­ரிக்கு பாத­யாத்­திரை செல்­வது வழ­மை­யான விட­ய­மாக இருந்­து­வந்­தது.

இப்பாத­யாத்­தி­ரைக்­கான சகல ஒழுங்­கு­க­ளையும் கடந்த காலங்­களில் மன்னார் மறை­மா­வட்ட அருட்­ப­ணி­யா­ளர்­கள் மேற்கொண்டு வந்தனர்.
ஆனால் இவ்­வ­ருடம் இப்­பா­த­யாத்­தி­ரைக்­கான ஒழுங்­கு­களை மன்னார் மறை­மா­வட்ட அருட்­ப­ணி­யா­ளர்­களால் ஒழுங்­க­மைப்பு செய்­யா­த­போதும் ஆழ­மான விசு­வாசம் கொண்ட இறை­மக்கள் இவ்­வ­ருடம் இப்­பா­த­யாத்­தி­ரைக்­கான ஒழுங்­க­மைப்பை மேற்­கொண்­டுள்­ள­தாக இதன் ஏற்­பாட்­டா­ளர்கள் தெரி­வித்­தனர்.
இப்பாத­யாத்­தி­ரையில் தலை­மன்னார் பங்கு, பேசாலை பங்கு, மன்னார் பேரா­லய பங்கு, வங்­காலை பங்கு ஆகிய பங்கு மக்கள் கலந்து கொள்­வ­தாக தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.


இன்று புதன்­கி­ழமை காலை மன்­னா­ரி­லி­ருந்து ஆரம்­ப­மாகும் பாத­யாத்­தி­ரையில் தலை­மன்னார் பேசாலை மன்னார் பேரா­லய பங்­கு­களின் பாத­யாத்­தி­ரி­கர்கள் இன்று புதன் கிழமை காலை மன்னார் பேரா­லயத்தில் நடை­பெறும் வழி­பாட்டைத் தொடர்ந்து காலை 5 மணிக்கு புறப்­பட்டு இரவு பெரி­ய­கட்டு புனித அந்­தோ­னியார் ஆல­யத்தில் தங்கி பின் நாளை வியா­ழக்­கி­ழமை அதி­காலை புறப்­பட்டு வவு­னியா இறம்­பைக்­குளம் புனித அந்­தோ­னியார் ஆல­யத்தில் இரவு தங்கி பின் வெள்­ளிக்­கி­ழமை அதி­காலை வவு­னியா கோம­ர­சன்­குளம் கல்­வா­ரியை நோக்கி புறப்­ப­டுவர்.

இதே­வேளை வங்­காலை பங்கு பாத­யாத்­தி­ரி­கர்கள் வங்­காலை புனித ஆனாள் ஆல­யத்­தி­லி­ருந்து நேற்று செவ்­வாய்­க்கி­ழமை காலை அங்கு நடை­பெற்ற வழி­பாட்டைத் தொடர்ந்து புறப்­பட்ட இவர்கள் பரப்­புக்­க­டந்தான் ஊடாக சென்று பெரி­ய­பண்­டி­வி­ரிச்சான் புனித மரி­ய­கொ­றற்றி ஆல­யத்தில் இரவு தங்கி பின் இவர்கள் வவு­னியா இறம்­பைக்­குளம் புனித அந்­தோ­னியார் ஆல­யத்தில் தங்கி மன்னார் தலை­மன்னார் பேசாலை பாத­யாத்­தி­ரி­கர்­க­ளுடன் இணைந்து அனை­வரும் வவு­னியா கோம­ர­சன்­குளம் கல்­வா­ரியை நோக்கி புறப்­ப­டுவர். இதைத் தொடர்ந்து வெள்­ளிக்­கி­ழமை இவர்கள் கோம­ர­சன்­குளம் கல்­வாரி புனித யாத்­தி­ரிகர்கள் தலத்தை அடைந்­ததும் அங்கு நடை­பெறும் திருச்­சி­லு­வைப்­பாதை மற்றும் திருப்­ப­லி­யிலும் கலந்து கொள்வர் என தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

அப்­ப­குதி பங்­கு ­தந்­தை­யர்­களின் ஆலோ­ச­னை­யுடன் மன்­னா­ரி­லி­ருந்து புறப்­பட்டுச் செல்லும் பாத­யாத்­தி­ரி­கர்­க­ளுக்கு இரா­ணுவம், பொலிஸ், மன்னார், வவு­னியா இலங்கை செஞ்­சி­லுவை சங்­கங்கள் என்பனவும் மன்னார் பிர­தேச செய­லக கிராம அலு­வ­லர்கள் மற்றும் உயி­லங்­குளம் முருங்கன் வர்த்­த­கர்கள் ஆகியோர் இவர்­க­ளுக்­கான தண்ணீர் பந்தல் குளிர்­பா­னங்கள் உண­வுகள் வழங்­கு­வ­தற்­கான நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

2013ஆம் ஆண்டும் இவ்வாறான பாதயாத்திரிகைக்கு மன்னார் மறைமாவட்ட நிர்வாகம் ஒழுங்குகள் மேற்கொள்ளாதிருந்தபோதும் விசுவாசிகள் கொண்ட பொதுநிலையினர் குழுவினரே தாங்களாக இவ்வாறான செயல்பாட்டை மேற்கொண்டமையும் இங்கு குறிப்பிடத்த க்கது
மன்னார் மறை­மா­வட்ட ஆழ­மான விசு­வாசம் கொண்ட பொது­நி­லை­யி­னரால் பாத­யாத்­திரை-02-03-2016 Reviewed by Author on March 02, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.