மன்னார் தாழ்வுபாட்டு கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட மீனவர்களில் 20 பேரை விளக்கமறியலில் வைக்க உத்தரவு.
இலங்கை கடற்பரப்பினுள் அத்து மீறி நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்ட நிலையில் மன்னார் தாழ்வுபாட்டு கடற்பரப்பில் வைத்து நேற்று சனிக்கிழமை மாலை கைது செய்யப்பட்ட 23 இந்திய மீனவர்களில் 20 மீனவர்களை எதிர்வரும் 21 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மன்னார் பதில் நீதவான் இ.கயஸ் பெல்டானோ இன்று ஞாயிற்றுக்கிழமை உத்தரவிட்டார்.
இந்திய மீனவர்கள் 23 பேர் 3 படகுகளில் கடலில் தங்கி இருந்து மீன் பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்த நிலையில் குறித்த மீனவர்கள் நேற்று சனிக்கிழமை மாலை இலங்கை கடற்பரப்பினுள் நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்டு வந்தனர்.
-இந்த நிலையில் 3 படகுகளில் குறித்த 23 இந்திய மீனவர்கள் இலங்கையின் தாழ்வுபாட்டு கடற்பிராந்தியத்தில் மீன் பிடியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது நேற்று சனிக்கிழமை மாலை கடற்படையினரினால் கைது செய்யப்பட்டு குறித்த 23 இந்திய மீனவர்களும் தாழ்வுபாட்டு கடற்படையினரிடம் ஒப்படைக்கப்பட்டதோடு,அவர்கள் மீன் பிடியில் ஈடுபட்ட குறித்த 3 படகுகளும் தாழ்வுபாட்டு கடற்படையினரிடம் ஒப்படைக்கப்பட்டது.
விசாரனைகளை மேற்கொண்ட கடற்படையினர் குறித்த மீனவர்களை மன்னார் பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.
மன்னார் பொலிஸார் விசாரனைகளின் பின் இன்று ஞாயிற்றுக்கிழமை மதியம் மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர்.
இதன் போது விசாரனைகளை மேற்கொண்ட மன்னார் பதில் நீதவான் இ.கயஸ் பெல்டானோ குறித்த மீனவர்களில் 20 பேரை எதிர் வரும் 21 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறும் ஏனைய வயது குறைந்த 3 சிறுவர் தொழிலாளர்களையும் எதிர்வரும் 21 ஆம் திகதி வரை மன்னாரில் உள்ள சிறுவர் இல்லம் ஒன்றில் அனுமதிக்குமாறும் மன்னார் பதில் நீதவான் இ.கயஸ் பெல்டானோ அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
மன்னார் நிருபர்
13-03-2016
இந்திய மீனவர்கள் 23 பேர் 3 படகுகளில் கடலில் தங்கி இருந்து மீன் பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்த நிலையில் குறித்த மீனவர்கள் நேற்று சனிக்கிழமை மாலை இலங்கை கடற்பரப்பினுள் நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்டு வந்தனர்.
-இந்த நிலையில் 3 படகுகளில் குறித்த 23 இந்திய மீனவர்கள் இலங்கையின் தாழ்வுபாட்டு கடற்பிராந்தியத்தில் மீன் பிடியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது நேற்று சனிக்கிழமை மாலை கடற்படையினரினால் கைது செய்யப்பட்டு குறித்த 23 இந்திய மீனவர்களும் தாழ்வுபாட்டு கடற்படையினரிடம் ஒப்படைக்கப்பட்டதோடு,அவர்கள் மீன் பிடியில் ஈடுபட்ட குறித்த 3 படகுகளும் தாழ்வுபாட்டு கடற்படையினரிடம் ஒப்படைக்கப்பட்டது.
விசாரனைகளை மேற்கொண்ட கடற்படையினர் குறித்த மீனவர்களை மன்னார் பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.
மன்னார் பொலிஸார் விசாரனைகளின் பின் இன்று ஞாயிற்றுக்கிழமை மதியம் மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர்.
இதன் போது விசாரனைகளை மேற்கொண்ட மன்னார் பதில் நீதவான் இ.கயஸ் பெல்டானோ குறித்த மீனவர்களில் 20 பேரை எதிர் வரும் 21 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறும் ஏனைய வயது குறைந்த 3 சிறுவர் தொழிலாளர்களையும் எதிர்வரும் 21 ஆம் திகதி வரை மன்னாரில் உள்ள சிறுவர் இல்லம் ஒன்றில் அனுமதிக்குமாறும் மன்னார் பதில் நீதவான் இ.கயஸ் பெல்டானோ அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
மன்னார் நிருபர்
13-03-2016
மன்னார் தாழ்வுபாட்டு கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட மீனவர்களில் 20 பேரை விளக்கமறியலில் வைக்க உத்தரவு.
Reviewed by NEWMANNAR
on
March 14, 2016
Rating:
No comments:
Post a Comment