அண்மைய செய்திகள்

recent
-

”என்னை நண்பராக ஏற்றுக்கொள்ளுங்கள்”: ஓரினச்சேர்க்கை நபருக்கு கடிதம் அனுப்பிய கனேடிய பிரதமர்


கனடா நாட்டில் ஓரினச்சேர்க்கை நபர் ஒருவரை அவரது அலுவலக மேலாளர் அவமதித்ததை அறிந்த அந்நாட்டு பிரதமர் அவருக்கு ஆறுதல் கூறி கடிதம் ஒன்றை அனுப்பியுள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அல்பேர்ட்டா மாகாணத்தில் உள்ள எட்மோண்டன் நகரில் Degas Sikorski(20) என்ற நபர் தனது பெற்றோருடன் வசித்து வருகிறார்.

ஓரினச்சேர்க்கையாளரான இவர் இதே நகரில் விருந்துகளை ஏற்பாடு செய்து தரும் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்துள்ளார்.

இந்நிலையில், கடந்த பெப்ரவரி 14ம் திகதி காதலர் தினத்தன்று அவரது அலுவலகத்தில் பணியாற்றும் அனைத்து ஊழியர்களுக்கும் வாலண்டைன் வாழ்த்து அட்டைகள் கொடுக்கப்பட்டது.

ஆனால், ஓரினச்சேர்க்கை நபருக்கு வாழ்த்து அட்டை கொடுக்கப்பட்டபோது, அவரது பாலினத்தை அவமதிக்கும் வகையில் கீழ்த்தரமான வாசங்கள் இருந்ததை கண்டு அவமானத்தால் கண்ணீர் விட்டுள்ளார்.

அவமானத்தை தாங்கிக்கொள்ளாத அவர் உடனடியாக தனது வேலையை ராஜினாமா செய்துவிட்டு வீடு திரும்பியுள்ளார்.

நடந்ததை அறிந்த தாயார் உடனடியாக அலுவலக மேலாளரை தொடர்புக்கொண்டு தனது மகனுக்கு நேர்ந்த கொடுமையை கண்டித்து பேசியுள்ளார்.

’இது எவ்வாறு நடந்தது என்பது தனக்கு தெரியாது என்றும், இந்த சம்பவம் தொடர்பாக விசாரிக்கப்படும்’ என விளக்கம் அளித்துள்ளார்.

ஆனால், மேலாளரின் விளக்கத்தால் கோபம் குறையாத தாயார் அந்த வாழ்த்து அட்டையை பேஸ்புக்கில் வெளியிட்டதை தொடர்ந்து பெரும் சர்ச்சை எழுந்தது.

இந்த பேஸ்புக் தகவலை பார்த்த நிறுவனம் ஒன்று Degas Sikorski-விற்கு வேலை வழங்க முன் வந்து தற்போது அவர் Starbucks பகுதியில் பணிபுரிந்து வருகிறார்.

இந்நிலையில், நபருக்கு ஏற்பட்ட சம்பவத்தை அறிந்த பிரதமரான ஜஸ்டின் ட்ரூடோ தனது கைப்பட ஒரு கடிதம் எழுதி வாலண்டன் அட்டையுடன் அவருக்கு கொடுத்து அனுப்பியுள்ளார்.

எட்மோண்டன் நகர நாடாளுமன்ற உறுப்பினர் மூலமாக அனுப்பப்பட்ட அந்த கடிதம் அவருக்கு கடந்த சனிக்கிழமை அன்று வழங்கப்பட்டது.

பிரதமர் அனுப்பிய அந்த கடிதத்தில், ‘ஓரினச்சேர்க்கையாளரான உங்களை நண்பராக பெற்றவர்கள் பலர் உள்ளனர். தற்போது பிரதமரான என்னையும் உங்களுடைய நண்பராக ஏற்றுக்கொள்ளுங்கள்’ என அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

பிரதமரின் வாழ்த்து கடிதம் குறித்து அவர் பேசியபோது, ‘பிரதமர் அனுப்பியுள்ள வாலண்டைன் அட்டை மிகவும் அழகாகவும், எனக்கு ஆறுதல் கூறுவதாகவும் இருந்தது. பிரதமருக்கு என்னுடைய நன்றியை காணிக்கையாக்குகிறேன்’ என உருக்கமாக பேசியுள்ளார்.

மேலும், தன்னை இழிவுப்படுத்திய நபர் மீது வழக்கு தொடர்ந்தால் அவரது எதிர்காலம் பாதிக்கப்படும் என்பதால், அந்த நடவடிக்கையை கைவிட்டு விட்டதாக Degas Sikorski தெரிவித்துள்ளார்.

”என்னை நண்பராக ஏற்றுக்கொள்ளுங்கள்”: ஓரினச்சேர்க்கை நபருக்கு கடிதம் அனுப்பிய கனேடிய பிரதமர் Reviewed by Author on March 14, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.