இலங்கையில் தாய்-சேய் மரண வீதத்தில் வீழ்ச்சி!
இலங்கையில் தாய்-சேய் மரணவீதம் ஒரு இலட்சத்திற்கு 32 வீதமாக குறைவடைந்திருப்பதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
இந்த சுட்டியை பிராந்திய நாடுகளுடன் ஒப்பிடுகையில் நாட்டின் சுகாதாரத் துறையில் காணப்பட்டுள்ள மற்றுமொரு வெற்றியாகும் என்று இலங்கை சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
கர்ப்ப காலப்பகுதியில் அல்லது மகப்பேற்றின் பின்னரான 42 நாட்களுக்குள் அல்லது சிகிச்சை தொடர்பில் பெண்ணொருவர் உயிரிழப்பது தாய்-சேய் மரணமாகக் கருதப்படுகின்றது.
இதேவேளை நாட்டின் தாய்-சேய் மரணம் தொடர்பான ஆய்வு மற்றும் அது தொடர்பான விழிப்புணர்வு நடவடிக்கைகள் 1985 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
மேலும் இவர்களுள் பெரும்பாலானோர் குறைந்த வருமானத்தினைப் பெறும் குடும்ப பின்னணியை கொண்டவர்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது
அத்துடன். இயற்கையான நோய், இருதய நோய், உள்ளிட்ட பல காரணங்களால் தாய்சேய் மரணங்கள் இடம்பெறுகின்றதாகவும், வைத்திய ஆலோசனைகளை உரிய முறையில் கடைப்பிடிக்காமையே இதற்கு காரணமாக விளங்குவதாகவும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இலங்கையில் தாய்-சேய் மரண வீதத்தில் வீழ்ச்சி!
Reviewed by Author
on
April 03, 2016
Rating:

No comments:
Post a Comment