ரஷ்யாவிடம் 400 மில்லியன் டொலரை கடனாக கோரும் இலங்கை...
ரஷ்ய அரசாங்கத்திடம் 400 மில்லியன் டொலர் கடனுதவியை இலங்கை கோரியுள்ளது.
ஆயுதங்களை கொள்வனவு செய்யும் நோக்கில் இந்த கடனுதவி கோரப்பட்டுள்ளது.
கடனுதவியை பெற்றுக் கொள்ளும் நோக்கில் மொஸ்கோவிலுள்ள இலங்கை தூதரக அதிகாரிகளுக்கும், ரஷ்ய அதிகாரிகளுக்கும் இடையில் பேச்சுவார்த்தை இடம்பெற்று வருகிறது.
இலங்கையின் முப்படைகள் மற்றும் பொலிஸாருக்குத் தேவையான போர்த் தளபாடங்களைக் கொள்வனவு செய்வதற்கே, 300 தொடக்கம் 400 மில்லியன் கடனுதவி கோரப்பட்டுள்ளது.
போர் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்வதும், இந்த உடன்பாட்டில் உள்ளடக்கப்படவுள்ளது.
இலங்கை அரசாங்கத்தின் கோரிக்கை தொடர்பில் ரஷ்யா சாதகமான பதிலை வழங்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
ரஷ்யாவிடம் 400 மில்லியன் டொலரை கடனாக கோரும் இலங்கை...
Reviewed by Author
on
May 01, 2016
Rating:

No comments:
Post a Comment