நஷ்டத்தில் இயங்குவதாக தெரிவிப்பது பொய்.!
மலையக பெருந்தோட்டங்கள் நஷ்டத்தில் இயங்குவதாக தெரிவிப்பதில் உண்மையில்லை. நஷ்டமென்றால் அனைத்தையும் பொறுப்பேற்றக அரசாங்கம் தயார் என பகிரங்கமாக தெரிவித்த சபை முதல்வரும், அமைச்சருமான லக்ஷ்மன் கிரியெல்ல, தோட்டத் தொழிலாளர்களுக்கு ரூபா 2500 சம்பள உயர்வு வழங்கப்பட வேண்டுமென்றும் வலியுறுத்தினார்.
தோட்டத் தொழிலாளர்களுக்கு 2500 ரூபா சம்பள உயர்வு வழங்க முடியாது என கடந்த காலங்களில் தோட்டக் கம்பனிகள் சம்பள உயர்வை வழங்காது நிராகரித்தது. முதலாளிமார் சம்மேளனம் மற்றும் தொழில் அமைச்சு உட்பட அரசியல் தலைவர்களுடனான பேச்சுவார்த்தைகள் கடந்த காலங்களில் தொடர் தோல்வி கண்டுவருவதும் இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.
நஷ்டத்தில் இயங்குவதாக தெரிவிப்பது பொய்.!
Reviewed by NEWMANNAR
on
May 29, 2016
Rating:

No comments:
Post a Comment