அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் கள்ளியடியில் இரண்டாவது தடவையாக ஒரே வீட்டில் கொள்ளை - இலுப்பைக்கடவை பொலிசார் அசமந்தம் -படங்கள் இணைப்பு

மன்னார் மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட கள்ளியடி கிராமத்தில் உள்ள வீடொன்றினுள் கடந்த 28.04.2016 அன்று வீட்டு உரிமையாளர்கள் மருத்துவ தேவைக்காக யாழ்சென்றிருந்த வேளை வீட்டின் பின்புற ஜன்னலை உடைத்து திருடர்கள் பல பெறுமதியான பொருட்கள்.தங்க ஆபரணங்கள்.மடிக்கணணி போன்றன இரண்டாவது தடவையாக கொள்ளையடித்து சென்றுள்ளமை கள்ளியடி மக்களிடையில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் இவ் வீட்டிலேயே கடந்த வருடமும் கள்ளியடி கற்பக பிள்ளையார் ஆலய வருடாந்த திருவிழாவின் போது புலத்திலிருந்து வந்திருந்த பிள்ளைகளின் பல இலட்சம் பெறுமதியான தங்க நகைகள்,மற்றும் பிரித்தானிய ஸ்டேர்லிங் பவுண்ட்ஸ் போன்றன கொள்ளையடிக்கப்பட்டிருந்த நிலையில் இது தொடர்பில் இதுவரை இலுப்பை கடவை பொலிசாரினால் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை.சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட ஒரு நபரை அதாரம் இல்லை என்பதற்காக பொலிசார் விடுவித்து விட்டனர் .

இந் நிலையில் இரண்டாவது தடவையாகவும் கொள்ளையடித்து சென்றுள்ளமை கள்ளியடி மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்ப்படுத்தி உள்ளது.

மேலும் நேற்று முன் தினம் நடை பெற்ற கொள்ளை சம்பவம் தொடர்பில் இலுப்பை கடவை பொலிசார் ,மோப்ப நாய்களை கொண்டு விசாரணை மேற்கொண்டனர் .மாங்குளம்,வவுனியாவில் இருந்தும் தடயவியல் பொலிசார் வரவழைக்கப்பட்டிருந்தனர்.

ஏற்கனவே நடைபெற்ற கொள்ளை சம்பவம் தொடர்பில் எந்த நடவடிக்கையும் இலுப்பைக்கடவை பொலிசார் எடுக்காத நிலையில் திரும்பவும் திருடு போயுள்ளமையும் ,இலுப்பைக்கடவை பொலிசாரின் அசமந்தபோக்கும்  மக்கள் மத்தியில் விசனத்தை ஏற்படுத்தி உள்ளது.




















மன்னார் கள்ளியடியில் இரண்டாவது தடவையாக ஒரே வீட்டில் கொள்ளை - இலுப்பைக்கடவை பொலிசார் அசமந்தம் -படங்கள் இணைப்பு Reviewed by NEWMANNAR on May 01, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.