வாழ்த்துக் கடிதம் அனுப்பிய விக்னேஸ்வரனுக்கு முதல்-அமைச்சர் ஜெயலலிதா நன்றி-இருவருக்கும் வசதிப்படும் ஒரு நாளில் நாம் நிச்சயம் சந்திக்கலாம்
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-
2016 - தமிழ்நாடு சட்ட மன்ற பொதுத் தேர்தலில் வெற்றி பெற்றதையட்டி முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு வாழ்த்துக் கடிதம் அனுப்பிய, இலங்கை வடமாகாண முதல்-அமைச்சர் நீதியரசர் விக்னேஸ்வரனுக்கு நன்றி தெரிவித்து முதல்- அமைச் சர் அனுப்பிய கடிதத்தின் விவரம் பின் வருமாறு:-
அண்மையில் நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டப் பேரவை தேர்தலில் நான் பெற்ற வெற்றி குறித்த உங்களது பாராட்டுக் கடிதத் திற்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழக மக்களின் தொப் புள் கொடி உறவுகளான இலங்கைத் தமிழர்கள் நலன் காக்க, அவர்கள் உரிய நீதியைப் பெற என்னால் இயன்ற நடவடிக்கைகளைக் கடந்த ஐந்து ஆண்டுகளில் தமிழ்நாட்டின் முதல்- அமைச்சர் என்ற முறையில் நான் எடுத்துள்ளேன்.
இலங்கை வடகிழக்கு மாகாணத் தமிழர்கள் உரிய நீதியைப் பெறும் வகையில் இந்திய அரசின் மூலம் தொடர்ந்து நடவடிக்கைகள் எடுப்பேன் என்பதை உங்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன்.தமிழகம் மற்றும் இலங்கை வடகிழக்கு மாகாணத் தமிழர்கள் உறவு மேலும் வலுவடையும் வகையில் என்னை சந்திக்க நீங்கள் விழைவதுக் குறித்து மிக்க மகிழ்ச்சி. இருவருக்கும் வசதிப்படும் ஒரு நாளில் நாம் நிச்சயம் சந்திக்கலாம் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.உங்களது நல்வாழ்த்து களுக்கு மீண்டும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
2016 - தமிழ்நாடு சட்ட மன்ற பொதுத் தேர்தலில் வெற்றி பெற்றதையட்டி முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு வாழ்த்துக் கடிதம் அனுப்பிய, இலங்கை வடமாகாண முதல்-அமைச்சர் நீதியரசர் விக்னேஸ்வரனுக்கு நன்றி தெரிவித்து முதல்- அமைச் சர் அனுப்பிய கடிதத்தின் விவரம் பின் வருமாறு:-
அண்மையில் நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டப் பேரவை தேர்தலில் நான் பெற்ற வெற்றி குறித்த உங்களது பாராட்டுக் கடிதத் திற்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழக மக்களின் தொப் புள் கொடி உறவுகளான இலங்கைத் தமிழர்கள் நலன் காக்க, அவர்கள் உரிய நீதியைப் பெற என்னால் இயன்ற நடவடிக்கைகளைக் கடந்த ஐந்து ஆண்டுகளில் தமிழ்நாட்டின் முதல்- அமைச்சர் என்ற முறையில் நான் எடுத்துள்ளேன்.
இலங்கை வடகிழக்கு மாகாணத் தமிழர்கள் உரிய நீதியைப் பெறும் வகையில் இந்திய அரசின் மூலம் தொடர்ந்து நடவடிக்கைகள் எடுப்பேன் என்பதை உங்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன்.தமிழகம் மற்றும் இலங்கை வடகிழக்கு மாகாணத் தமிழர்கள் உறவு மேலும் வலுவடையும் வகையில் என்னை சந்திக்க நீங்கள் விழைவதுக் குறித்து மிக்க மகிழ்ச்சி. இருவருக்கும் வசதிப்படும் ஒரு நாளில் நாம் நிச்சயம் சந்திக்கலாம் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.உங்களது நல்வாழ்த்து களுக்கு மீண்டும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
வாழ்த்துக் கடிதம் அனுப்பிய விக்னேஸ்வரனுக்கு முதல்-அமைச்சர் ஜெயலலிதா நன்றி-இருவருக்கும் வசதிப்படும் ஒரு நாளில் நாம் நிச்சயம் சந்திக்கலாம்
Reviewed by NEWMANNAR
on
May 28, 2016
Rating:

No comments:
Post a Comment