தமிழக மீனவர்களை காப்பாற்றிய இலங்கை மீனவர்கள்
தமிழக மீனவர்களின் படகு பழுதடைந்த நிலையில் அதிலிருந்த ஐந்து மீனவர்களை இலங்கை மீனவர்கள் நேற்று காப்பாற்றியுள்ளனர்.
இந்த நிலையில் குறித்த ஐந்து மீனவர்களும் நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்செய்யப்பட்டு ஜூலை 7 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
வல்வெட்டித்துறை கடற்பகுதியில் வைத்தே இவர்கள் காப்பாற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து வல்வெட்டித்துறை இராணுவ முகாமுக்கு மீனவர்கள் அழைத்துச்செல்லப்பட்ட பின்னர் பொலிஸார் ஊடாக நீதிமன்றத்தில் ஆஜர்செய்யப்பட்டனர்.
குறித்த ஐந்து மீனவர்களும் வேதாரணியத்தை சேர்ந்தவர்கள் என அறியமுடிகின்றது.
தமிழக மீனவர்களை காப்பாற்றிய இலங்கை மீனவர்கள்
Reviewed by NEWMANNAR
on
June 24, 2016
Rating:

No comments:
Post a Comment