ஆலயம் மற்றும் பள்ளிவாசல் புனரமைப்பிற்காக காசோலைகள் வழங்கி வைப்பு-Photos
மன்னார் பெரியகடையில் அமைந்துள்ள மடுமாதா சிறிய ஆலயத்திற்கான குடிநீர் இணைப்பை வழங்குவதற்கும்,மதீனா நகர் பள்ளிவாசலை புனரமைப்பு செய்வதற்கும் வடமாகாண அமைச்சர் பா.டெனிஸ்வரன் நேற்று(30) வியாழக்கிழமை நிதியுதவி வழங்கி வைத்துள்ளார்.
-மன்னார் பேராலய பங்குத்ததந்தையின் கோரிக்கைக்கு அமைவாக மன்னார் பெரியகடையில் அமைந்துள்ள மடு மாதா சிறிய ஆலயத்திற்கான குடிநீர் இணைப்பை பெற்றுக்கொள்ளுவதற்கான காசோலையினை அமைச்சர் நேற்று வியாழக்கிழமை மன்னார் செபஸ்தியார் பேராலய இணைப் பங்குத்தந்தையிடம் வழங்கி வைத்தார்.
மேலும் மடு பிரதேச செயலாளர் பிரிவுக்குற்பட்ட மதீனா நகரில் உள்ள இஸ்லாமிய சமூகத்தின் வேண்டுகோளுக்கிணங்க,மதீனா நகர் பள்ளிவாசலை புனரமைப்பதற்கான நிதியினை அமைச்சர் காசோலையாக நேற்று வழங்கி வைத்தார்.
மதீனா நகர் பள்ளிவாசல் நிர்வாகத்திடம் குறித்த காசோலையினை அமைச்சர் வழங்கி வைத்தார்.அமைச்சரின் மன்னார் மாவட்ட உப அலுவலகத்தில் வைத்து குறித்த காசோலைகள் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
ஆலயம் மற்றும் பள்ளிவாசல் புனரமைப்பிற்காக காசோலைகள் வழங்கி வைப்பு-Photos
Reviewed by NEWMANNAR
on
July 01, 2016
Rating:

No comments:
Post a Comment