அண்மைய செய்திகள்

recent
-

வடக்கின் தேவைகள் குறித்து கொழும்பில் முக்கிய பேச்சு! வடக்கு முதல்வரும் பங்கேற்பு.....


வடக்கு மாகாணத்தின் தேவைகள் தொடர்பான முக்கிய கலந்துரையாடல் நாளை மறுதினம் செவ்வாய்க்கிழமை கொழும்பில் இடம்பெறவுள்ளது.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் பணிப்பின்பேரில் அவரது ஆலோசகர்களில் ஒருவரான பாஸ்கரலிங்கம் தலைமையில் இந்தக் கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது.

நிதி அமைச்சின் அலுவலகத்தில் நடைபெறவுள்ள இந்தக் கலந்துரையாடலில் வடக்கு மாகாண முதலமைச்சர் உட்பட பல்வேறு தரப்பினரும் கலந்துகொள்ளவுள்ளனர்.

அத்துடன், இந்த கலந்துரையாடலின் போது வடக்கின் தேவைகள் சம்பந்தமாக விரிவாக ஆராயப்படவுள்ளது எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, இந்தக் கலந்துரையாடலில் தான் பங்குபற்றவுள்ளதாக வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

வடக்கின் தேவைகள் குறித்து கொழும்பில் முக்கிய பேச்சு! வடக்கு முதல்வரும் பங்கேற்பு..... Reviewed by Author on August 22, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.