இருதய நோயாளர்களுடன் விளையாடும் ஊழியர்கள் - ஆபத்தில் நோயாளர்கள்....
இருதய சத்திரசிகிச்சைகளுக்கு உதவும் தெரபிஸ்ட் என்ற சிகிச்சையாளர்கள் நாளை முதல் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளனர்.
சம்பள உயர்வு உட்பட்ட கோரிக்கைகளை முன்வைத்தே அவர்கள் தமது பணிப்புறக்கணிப்பை நடத்தவுள்ளனர்.
இதன் காரணமாக இருதய சத்திரசிகிச்சைகள் பிற்போடப்படும் ஆபத்து உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் அவசர சத்திரகிசிச்சைகளில் தமது தொழில்சங்கத்தினர் ஈடுபடுவர் என்று தெரபிஸ்ட் சிகிச்சையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
தேசிய வைத்தியசாலையில் மாத்திரம் சுமார் 10 பேர் இருதய சத்திர சிகிச்சைகளுக்காக தம்மை பதிவு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இருதய நோயாளர்களுடன் விளையாடும் ஊழியர்கள் - ஆபத்தில் நோயாளர்கள்....
Reviewed by Author
on
September 26, 2016
Rating:

No comments:
Post a Comment