அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் நகரசபை பொது நூலகத்திற்கு 2015ஆம் ஆண்டுக்கான தேசிய விருது-Photos


தேசிய வாசிப்பு மாதத்தை முன்னிட்டு கடந்த ஆண்டு தேசிய நூலக ஆவணமாக்கல் சபையால் பொது நூலகங்களுக்கு நடத்தப்பட்ட சிறப்பான செயற்பாட்டுக்கான தேசிய ரீதியில் சிறந்த நூலகங்களை தெரிவு செய்யும் செயற்பாட்டில் மன்னார் நகரசபை பொது நூலகத்திற்கு 2015ம் ஆண்டுக்கான தேசிய விருதும் , சான்றிதளும், புத்தகங்களும், அன்பளிப்பும் கிடைக்கப்பெற்றுள்ளது.

கடந்த ஆண்டு தேசிய வாசிப்புமாத செயற்பாடுகளின் அடிப்படையில் தெரிவு செய்யப்பட்ட பொது நூலகங்களின் சிறப்பு செயற்பாட்டிற்கான விருதுகள் வழங்கும் நிகழ்வு கடந்த 07ந் திகதி வவுனியா, நகரசபை மண்டபத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்விற்கு முதன்மை விருந்தினராக கல்வி இராஜாங்க அமைச்சர் திரு வே.இராதாகிருஸ்ணன் அவர்கள் கலந்து கொண்டு விருதுகளையும் சான்றிதழ்களையும் வழங்கி வைத்தார்.

மேலும் மன்னார் பொது நூலகமானது E Library இலத்திரனியல் நூலகமாக தற்போது ஒரு பகுதி உருவாக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.

எனினும் இதன்மூலம் மாணவர்கள் தங்கள் கல்வி செயற்பாட்டிற்கான நடவடிக்கைக்காக இணையத்தளங்களை பயன்படுத்த முடிவதுடன் சகல இரவல் புத்தகங்களும் கணணிமயப்படுத்தப்பட்டு பதிவேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன் எதிர்வரும் காலங்களில் சகல இரவல் வழங்கும் பகுதிகளும் வலையமைப்பின் ஊடாக செயற்படுவதுடன் குறித்த காலப்பகுதியில் இரவல் புத்தகங்கள், மீள ஒப்படைக்காத அங்கத்தவர்களுக்கு தன்னியங்கி செயற்பாட்டின் மூலம் குறுஞ்செய்திகளை குறித்த நபர்களின் கையடக்க தொலைபேசிகளுக்கு ஞாபகமூட்டல் செயற்பாட்டு நகவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளதாக நகரசபை செயலாளர் றெனால்ட் பிறிற்றோ தெரிவித்தார்.


மன்னார் நகரசபை பொது நூலகத்திற்கு 2015ஆம் ஆண்டுக்கான தேசிய விருது-Photos Reviewed by NEWMANNAR on October 14, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.