நாங்களும் மனிதர்கள் தான் எங்களுக்கும் தேவைகள் உண்டு-புரிந்துகொள்ளுங்கள்.......
60 வயது என்ற உடனே ஒய்வுபெற நினைப்பவர்களும் உலகத்தை சுற்றிவர நினைப்பவர்களும் பிள்ளைகளின் உழைப்பைநம்பி இருப்பவர்களுமேஅதிகம்
இருப்பினும் எத்தனை வயது ஆனாலும் தமது சொந்த சம்பாத்தியத்தால் காலம் முழுவதும் மற்றவர்களிடம் கை ஏந்தாமல் வாழ்பவர்களும் உண்டு.
அதற்கு சிறத்த எடுத்துக்காட்டு 10 வருடங்களுக்குமேல் செருப்புதைக்கும் பணியில் ஈடுபட்டுவரும் பெரியவர்கள். பொதுவாக பிரதான வீதியில் ஏதாவது ஒரு மரத்தடியில் தங்களுடைய அன்றாடதொழிலை செய்துவரும் அவர்களை தேவை வரும் வரை நாம் ஒரு பொருட்டாக மதிப்பதில்லை . அவர்களுடைய தொழிலுக்கு பின்னால் உள்ள அவமானங்களையும் அவர்களின் வாழ்விற்கு பின்னால் உள்ள ரணங்களையும் யாரும் அறிவது இல்லை அறியவிரும்புவதும் இல்லை மன்னார் நகரசபையின் பின்புறத்தில் உள்ள வாய்க்கால் அருகில் தங்களுடைய நிறுவனத்தை அமைத்து உள்ளனர் செருப்புதைக்கும் ஊழியர்கள் எந்த ஒரு போட்டி பொறமை இன்றி நன்கு தொழில் செய்வதிலும் சரிஃதொழிலை பிரிப்பதிலும் சரி உணவிலும் சரி அப்படி ஒரு ஒற்றுமை.பெரிதாக லாபம் தராத தொழிலாக இருந்தாலும் அவர்களின் ஒற்றுமை மெய்சிலிர்க்க வைக்கின்றது.
இவர்கள் தொழில் புரியும் பகுதியானது மன்னார் நகரசபைக்கு சொந்தமானபகுதிஆகும் 12 மாதகாலப்பகுதியில் புது வருட கடைகள் வருவதால் இத் தொழிலாழிகள் அப்புற படுத்தபடுகின்றார்கள்.மழைக்காலபகுதியிலும் இவர்களால் தொழில் செய்யமுடியாத நிலைக்கு ஆழாக்கபடுகின்றனர் .அன்றாடம் உழைத்தே இவர்கள் வாழ்க்கையை நடத்தவேன்டிய நிலையில் இவ்வாறான பிரச்சினைகளால் பல நாட்கள் வருமானம் இன்றி வறுமையில் வாடுகின்றர்கள.;
எனவே இவர்கள் கேட்பது எல்லாம் பணமோ உதவியே அல்ல தாங்கள் நிரந்தரமாக தொழில் செய்வதற்கும் கௌரவமாக தங்கள் சொந்த சம்பாத்தியத்தில் வாழ்க்கை நடத்துவதற்கும் ஒரு சிறியநிலம் மத்திரமே
ஆனால் இவர்கள் இது தொடர்பாக உரியஅதிகாரிகளிடம் தெரிவித்தபோது இத் தொழிலானது மன்னாருக்கு அவசியமற்றதொழில் எனவும் இத் தொழிலை மன்னார் தீவிற்குவெளியில் மேற்கொள்ளுமாறுபணிக்கப் படுகின்றனர். 10 வருடத்திற்குமேல் இப் பிரதேசத்தில் தொழில் செய்யும் தங்களை வேறுபகுதியில் அனுப்பவேண்டாம்எனவும்தாங்களுக்கு நிரத்தரமாக ஒரு இடம் வழங்குமாறுகேட்டு கொள்கின்றனர் .
எனவே இவர்களின தேவைஅறிந்துசம்மந்தப்பட்ட அதிகாரிகளும் அரசியல் வாதிகளும் உதவிசெய்து இவர்களின் பிரச்சினைக்கு நல்லதொரு தீர்வை கொடுக்க வேண்டும் என்றும் இவர்கள் செருப்புதைப்பவகர்கள் தானேஎனஅலட்சியம் செய்யவேண்டாம் எனவும் கேட்டுகொள்கின்றோம் .
-J-நயன்-
நாங்களும் மனிதர்கள் தான் எங்களுக்கும் தேவைகள் உண்டு-புரிந்துகொள்ளுங்கள்.......
Reviewed by Author
on
October 14, 2016
Rating:

No comments:
Post a Comment