அண்மைய செய்திகள்

recent
-

இராவணனை பற்றிய சில உண்மைகள் இதோ.....


இராவணனை பற்றிய சில உண்மைகள் இதோ,

  • இராவணன் பாதி பிராமண குலத்தையும், பாதி அசுர குலத்தையும் சேர்ந்தவன். இவர் தந்தையின் பெயர் விஷ்ராவா ரிஷி முனிவர். இவரின் தாட் கைகாசி அசுர குலத்தை சேர்ந்தவர்.
  • இராவணனின் தந்தைக்கு இரண்டு மனைவிகள். முதல் மனைவியின் பெயர் வாரவர்னினி இவர்களின் ஒரே மகன் தான் செல்வத்துக்கு கடவுளான் குபேரன். விஷ்ராவாவின் இரண்டாவது மனைவியான கைகாசிக்கு ராவணன், கும்பகர்ணா, விபீஷனா, சூர்பனகை என நான்கு பிள்ளைகள் உண்டு.
  • இராவணனின் இயற்பெயர்கள் தசகிரிவா மற்றும் தசாநனா என்பதாகும். பின்னர் ராவணன் என எல்லோராலும் அழைக்கப்பட்டார்.
  • இராவணன் மிக பெரிய சிவ பக்தன் ஆவார். அவரின் நெற்றியில் திருநீர் எப்போதும் இருக்கும்.
  • இலங்கை என்றும் அழியாமல் இருக்க சிவபெருமானை நோக்கி தவமிருந்தார் ராவணன். தவத்தில் மகிழ்ந்த சிவபெருமாள் ஆத்மலிங்கத்தை ராவணனுக்கு தந்தார். அதை இலங்கை செல்லும் வரை கீழே வைக்க கூடாது என்றார், ஆனால் தேவர்களின் சூழ்ச்சியால் இராவணனால் அதை இலங்கைக்கு கொண்டு செல்ல முடியவில்லை.
  • அனரன்யா மன்னரை ராவணன வதம் செய்தார். அந்த மன்னர் இறக்கும் போது இறக்கும் போது தசரதன் மகனால் தான் எனக்கு இறப்பு என கூறினார். அதன்படியே ராமனால் வதம் செய்யப்பட்டார் ராவணன்.
  • குரங்கு குல தலைவனான பாலியை ராவணன் கொல்ல முயற்சித்தார். ஆனால் மிக சக்தி வாய்ந்த பாலி ராவணை தன் கையால் தூக்கி கொண்டு கிஸ்கிந்தைக்கு சென்றது. அங்கு உனக்கென்ன வரம் வேண்டும் என கேட்க இருவரும் நண்பர்களாக இருப்போம் என ராவணன் கூறினார், பின்னர் இருவரும் நண்பர்களானார்கள்.
  • போர் குணம் கொண்ட ராவணனுக்கு ஜோதிடம் பார்க்கும் அபார திறமையும், வேத மந்திரங்களை கற்று தேறிய ஆற்றலும் இருந்தது.
  • ஆட்சி கலையில் சிறந்து விளங்கியவர் ராவணன். ராமன் அவரை வதம் செய்த போது ராவணன் இறக்கும் தருவாயில் இருந்தான். அப்போது தன் தம்பி லட்சுமணை ராவணனிடம் அனுப்பிய ராமன், அவனிடம் ஆட்சி கலையை கற்று கொள்ளும்படி சொன்னார்.
  • இராவணனின் தம்பி விபீஷனா ராமனின் தீவிர பக்தனாவார். பத்தாவது நாள் போரின் போது ராமனிடன் தன் அண்ணனின் வயிற்று பகுதியில் அம்பை விட சொன்னது இந்த விபீஷனன் தான்.
  • இராவணன் கடும் தவம் செய்து பிரம்மனிடம் தன் உயிருக்கு எந்த கடவுளாலும், முனிவராலும், அரக்கர்களாலும் ஆபத்து வர கூடாது என வரம் கேட்டான். அது கிடைக்கவும் செய்தது. ஆனால் மனித உருவெடுத்த இராமன் பின்னாளில் ராவணனை வதம் செய்தார்.
  •  
 வஞ்சத்தால் வீழ்ந்த மாவீரன் வருவான் -தொடரும்.......

இராவணனை பற்றிய சில உண்மைகள் இதோ..... Reviewed by Author on October 15, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.