மடு பூமலர்ந்தான் கிராமத்தின் தெரிவுசெய்யப்பட்ட 23 மாணவர்களுடன் சந்திப்பு-துரையம்மா அன்பகத்தினர்.....
மன்னார் மாவட்டத்தின் கல்விக்கான தனது சேவையினை ஆற்றிவரும் துரையம்மா அன்பகத்தினர் இந்த வருடம் ஆரம்பத்தில் 21-02-2016 அன்று மடுப்பிரதேச செயலாளர் F.C.சத்தியசோதி அவர்களின் அனுமதியுடன் கிராமசேவகர் டிக்சன் மற்றும் மாதர்சங்கத்தின் பங்குபற்றுதலோடு தங்களது அமைப்பின் மூலம் கல்விக்க உள்வாங்கப்பட்ட மடு பூமலர்ந்தான் கிராமத்தில் இருந்து 23 மாணவமாணவிகளுக்கான பாடசாலை கற்றல் உபகரணங்கள் வழங்கிவைத்தனர்.
அது போலவே பிறக்கவிருக்கின்ற வருடத்திற்கான கொடுப்பனவுகள் தேவைகள் மாணவமாணவர்களின் கல்விச்செயற்பாடுகள் போன்றவற்றின் வளரச்சி வீதம் பற்றிய கலந்துரையாடல் ஒன்றை மேற்கொள்வதற்காக மடுப்பிரதேசசெயலாலளர் அவர்களை அவரது பணிமனையில் 14-10-2016 அன்று காலை 10மணியளவில் துரையம்மா அன்பகத்தின் இயக்குநர் வே.மனுவேல்பிள்ளை உதவிச்செயலாளர் வை.கஜேந்திரன் அவர்களும் செயலாளரிடம் கலந்தாலோசித்ததோடு செயலாளர் அவர்களினால் உண்மையான தேவையிருப்பதாகவும் முடிந்த வரை அவர்களுக்கான கல்வி உபகரணங்களை வழங்கி அந்த மாணவர்களின் தொடர்ச்சியான கல்விக்கு உதவவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
அதனைத்தொடர்ந்து மாலை 3-30மணியளவில் மடு பூமலர்ந்தான் கிராமத்தின் தெரிவுசெய்யப்பட்ட மாணவர்களுடன் அவர்களது பெற்றோருடனும் கலந்துரையாடலில் மாணவர்களின் குறைகளை கேட்டறிந்துடன் புதுவருடத்திற்கான கொடுப்பனவின் தேவைகள் இந்த வருட இறுதிக்குள் வழங்க ஏற்பாடுகள் செய்யப்படும் என்று துரையம்மா அன்பகத்தின் இயக்குநர் தெரிவித்தார்.
மடு பூமலர்ந்தான் கிராமத்தின் தெரிவுசெய்யப்பட்ட 23 மாணவர்களுடன் சந்திப்பு-துரையம்மா அன்பகத்தினர்.....
Reviewed by Author
on
October 15, 2016
Rating:
No comments:
Post a Comment