அண்மைய செய்திகள்

recent
-

முல்லைத்தீவில் குடிநீர் தட்டுப்பாட்டை எதிர்நோக்கியுள்ள இராணுவத்தினர்...


முல்லைத்தீவு மாவட்டத்தில் தற்பொழுது ஏற்பட்டுள்ள வறட்சியான காலநிலை காரணமாக இராணுவத்தினர் குடிநீர் தொடர்பான பிரச்சினையை எதிர்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

முல்லைத்தீவு இராணுவமுகாம், கேப்பாபுலவு இராணுவமுகாம் உள்ளிட்ட சில முகாம்களில் உள்ள இராணுவத்தினருக்கு, வெளி இடங்களில் இருந்து குடி நீர் எடுத்துச் செல்லப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன் காரணமாக வீதிகளில் கனரக நீர் கொள்கலன் வாகனகங்களின் போக்குவரத்து அதிகரித்துள்ளதாகவும், பெரும் சிரமங்களின் மத்தியில குடி நீர் எடுத்துச்செல்லப்படுவதாகவும் தெரிவிக்கபடுகின்றது.

முல்லைத்தீவு மாவட்டத்தில் அதிகளவான இராணுவத்தினர் நிலைகொண்டுள்ள நிலையில் அவர்கள் குடிநீர் பெற்றுக்கொள்வதில் தற்போது பெரும் பிரச்சினையை எதிர்கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

முல்லைத்தீவில் குடிநீர் தட்டுப்பாட்டை எதிர்நோக்கியுள்ள இராணுவத்தினர்... Reviewed by Author on October 14, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.